districts

அனைத்து சமூகத்தினர் கொண்ட குழு அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, மே 12- அரூர் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் தொடர்ந்து தீண்டாமை வன் கொடுமைகள் நடந்த வண்ணம் உள் ளன. இதுகுறித்து தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செய லாளர் ஏ.குமார் விடுத்துள்ள அறிக் கையில், அரூர் அருகே உள்ள  கீரைப்பட்டி கிராமத்தில் செயல் பட்டு வரும் சலூன் கடையில், கௌாப்பாறையைச் சேர்ந்த சஞ் சய் என்ற இளைஞர் முடிவெட்ட சென்றுள்ளார். அவர் பட்டியலினத் தைச் சேர்ந்தவர் என தெரிந்தவு டன், ‘உங்களுக்கு முடிவெட்ட முடி யாது’ என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஏன் என்று கேட் டதற்கு ‘காலனி பசங்களுக்கு முடி வெட்ட முடியாது’ என மறுத்துள் ளார். சாதிப்பெயரை உச்சரித்து, இது காலம் காலமாக உள்ள வழக் கம் எனக்கூறியுள்ளார். இதுகுறித்து  பாதிக்கப்பட்டவர் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அரூர் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரு கின்றன. ஏற்கனவே, கொட்டாங்குச் சியில் தேநீர் கொடுத்த விவகாரம்,  மாட்டு இறைச்சியை பேருந்தில் எடுத்துச்சென்ற மூதாட்டி ஒருவரை பாதி வழியில் இறக்கிவிட்ட சம்ப வம், தற்போது பட்டியலின மக்க ளுக்கு முடி திருத்தம் செய்ய முடி யாது என்ற சம்பவம் என தொடர்ந்து கொண்டே போகிறது. எனவே, தொடரும் தீண்டாமை வன் கொடுமைகளைத் தடுத்திட ஊராட்சி அளவில் அனைத்து சமூ கத்தினரையும் உள்ளடக்கிய குழுக் கள் அமைக்கப்பட வேண்டும். மக்க ளிடம் சட்ட ரீதியான விழிப்பு ணர்வை ஏற்படுத்த அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது வனத்துறை தாக்குதல் கடந்த மே 10 ஆம் தேதியன்று  ஒகேனக்கல் வனப்பகுதியில் பல் லாண்டு காலம் குடியிருந்து வரும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் மீது வனத்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்கள், குழந் தைகள் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மனித  உரிமை மீறல்கள் நடைபெற்றுள் ளன. இதனை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக் கிறது. பென்னாகரம், பாப்பாரப் பட்டி, பாலக்கோடு, அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி உள்ளிட்ட மாவட்டத் தின் பல பகுதிகளில் வனப்புறம் போக்கு நிலங்களில் விவசாயிக ளும், பழங்குடி மக்களும் பல் லாண்டு காலம் குடியிருந்தும், விவ சாயம் செய்தும் வருகின்றனர். அவர்களுக்கு உரிய மாற்று இடம் வழங்காமல் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவது, தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது. வனத்துறையினர் இப்போக்கைக் கைவிட வேண்டும். மேலும், புறம் போக்கு நிலங்களில் பல்லாண்டு  காலம் குடியிருந்து வரும் விவசாயி களுக்கு வீட்டுமனைப்பட்டாவும், நிலப்பட்டாவும் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரும புரி மாவட்டச் செயலாளர் ஏ.குமார் விடுத்துள்ள அறிக்கையில் வலி யுறுத்தப்பட்டுள்ளது.