மயிலாடுதுறை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திமுக சார்பில் ஒருமைப்பாட்டு சமபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக பிரமுகரும் தொழிலதிபருமான ஷாவலியுல்லாஹ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் நிவேதா எம்.முருகன் வடமாநிலத் தொழிலாளர்களை சால்வை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து சமபந்தி நடைபெற்றது. சீர்காழி ஒன்றியப் பெருந்தலைவர் கமலஜோதி முத்துதேவேந்திரன் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், செல்வமணி, நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் ரவி, சிவதாஸ் மற்றும் கொக்கரக்கோ சௌமியன். மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.