மழையால் கூரை வீடு சேதம்: எம்எல்ஏ நிதியுதவி
தஞ்சாவூர், நவ.19 - பேராவூரணி அருகே மழையால் கூரை வீடு சேதமடைந்த குடும்பத்தி னருக்கு, பேராவூரணி எம்எல்ஏ ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த இரண்டு தினங்க ளாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பேரா வூரணி அருகே உள்ள மாவடுகுறிச்சி ஊராட்சி கொன்றைக்காடு, ஊரணி குளக்கரைத் தெருவில் வசித்து வருபவர் ஜோதி. இவருடைய கணவர் கலியமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு 20 வயதிலும், 15 வயதிலும் மதுமிதா, மாதவி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் கூரை வீடு முற்றிலும் சேத மடைந்து விழுந்தது. இதுகுறித்து தகவ லறிந்த பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் பாதிக் கப்பட்ட குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறி ரூ.5,000 நிதி உதவி வழங் கினார்.
குழந்தைகள் தின கொண்டாட்டம்
அரியலூர், நவ.19 - அரியலூர் மாவட் டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப் பள்ளி யில் 100 நாள் நிறைவு நாள் மற்றும் குழந்தை கள் தின விழாவை யொட்டி கலை நிகழ்ச்சி மற்றும் கல்வி இணை செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. மீனாட்சி ராமசாமி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் எம்.ஆர்.பால சுப்பிரமணியன் தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் சிவகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரான மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் (தனியார் பள்ளி) நிகழ்ச்சி யினை தொடக்கி வைத் தார். நிகழ்ச்சியில் எல்கேஜி முதல் 2 ஆம் வகுப்பு வரை பயிலும் மாண வர்கள், தாங்கள் இது வரை கற்ற கல்வி சம்பந்த மாக கல்வி இணை செயல் பாடுகளை செய்தும், கலை நிகழ்ச்சியில் நட னமாடியும் தங்களது திறமைகளை வெளிப்ப டுத்தினர். பள்ளி துணை முதல்வர் ஜெகதீசன் நன்றி கூறினார்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து நவ.22-இல் தொழிற்சங்கங்கள் பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி, நவ.19 - எல்.ஐ.சி, பி.எஸ்.என்.எல், ஐக்கிய விவசாயிகள் சங்கம், இளைஞர், மாணவர், மாதர் அமைப்புகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் சிஐடியு திருச்சி மாவட்ட அலுவலகத்தில் திங்களன்று நடந்தது. தொமுச மாவட்டச் செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார். இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.26 அன்று பூம்புகார் வளைவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மரக்கடையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. இந்தப் போராட்டத்தை விளக்கி நவ.22 அன்று மாலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் சிஐடியு ரெங்கராஜன், ஏஐடியுசி சுரேஷ், ஹெச்எம்எஸ் ஆலயமணி, ஐஎன்டியுசி ஆறுமுகம், எல்எல்எப் தெய்வீகன், எல்ஐசி ஜோன்ஸ், பிஎஸ்என்எல்இயு சுந்தர்ராஜன், தொமுச குணசேகரன் தமுஎகச பேராசிரியர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டத் தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.
நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
திருச்சிராப்பள்ளி, நவ.19 - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2024-25 ஆம் ஆண்டு சிறப்பு (சம்பா) பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை 91,835 ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த நவ.15 ஆம் தேதி பயிர் காப்பீடு செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், 18.938 ஏக்கர் பரப்பளவிற்கு மட்டுமே விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். மேலும் நடவு பணிகளை தாமதமாக ஆரம்பித்ததாலும், மழை பொழிவு தாமதமாக உள்ளதாலும், இன்னும் 15 நாட்களுக்கு பயிர் காப்பீட்டு காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கான பயிர் காப்பீட்டு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.566-ஐ உடனடியாக பொது சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். நடப்பு ரபி மற்றும் சிறப்பு பருவத்திற்கு ஷீமா பொது காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல், நவ.30 ஆம் தேதிக்கு முன்னதாகவே காப்பீடு செய்து பயன் பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
ஒரத்தநாட்டில் ஆயிரம் கிலோ குட்கா மூட்டைகள் பறிமுதல் 6 பேர் கைது
தஞ்சாவூர், நவ.19- ஒரத்தநாடு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயிரம் கிலோ குட்காவை பறிமுதல் செய்து 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வழியாக வாகனங்கள் மூலம் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஒரத்தநாடு உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ் இலியாஸ் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். தென்னமநாடு தேசிய நெடுஞ்சாலையில் வந்த காரை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது, பின்னால் வந்த லாரி ஒன்று நிற்காமல் சென்றது. அந்த லாரியை காவல்துறையினர் விரட்டிச் சென்று பிடித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த லாரி காரை பின்தொடர்ந்து வந்தது எனத் தெரிந்தது. பிறகு லாரியை சோதனையிட்ட போது அதில், 1000 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள்கள் இருந்தது. இதையடுத்து கார் மற்றும் லாரியில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிராஜுதீன், அப்துல் வஹாப், அப்துல்ரஹீம், ரஷீத், சர்புதீன், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா பக்ருதீன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சிராப்பள்ளி, நவ.19 - திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை யின் மூலம் ஆதிதிராவிடர் நல மக்களின் முன்னேற்றத் திற்கும், அரிய தொண்டு செய்பவர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கும் திருவள்ளு வர் திருநாளில் “டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது” ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது 2025 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திரு நாளன்று வழங்கப்பட உள்ளது. “டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது” பெற விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், அதற்கான உரிய படிவத்தினை திருச்சிராப் பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்று கொள்ளலாம். பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய முன்மொழிவுகளை 25.11.2024-க்குள் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை 4 நாட்களுக்கு பிறகு இருவரின் உடல்கள் மீட்பு
தஞ்சாவூர், நவ.19 - தஞ்சாவூர், முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் மதன கோபால். இவரது மனைவி ஈஸ்வரி (59). இவர்களது மகன் ராகுல் (29) இன்ஜினியரிங் முடித்துவிட்டு, சொந்த மாக தொழில் செய்து வந்தார். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு மதனகோபால் இறந்து விட்டதால், வீட்டில் ஈஸ்வரியும், ராகுலும் மட்டும் வசித்து வந்தனர். கடந்த நான்கு நாட்களாக ஈஸ்வரி வீடு பூட்டியே கிடந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் ஈஸ்வரியும், ராகுலும் வெளியூருக்குச் சென்று விட்டதாக எண்ணி இருந்துள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை ஈஸ்வரி வீட்டிற்கு வந்த தூய்மைப் பணியா ளர் ஒருவர், துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினரி டமும், ராகுலின் நண்பர் ஒருவருக்கும் தகவல் தெரி வித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த ராகுலின் நண்பர், அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல்துறையினர், உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கழிவறையில் ஈஸ்வரி இறந்த நிலையிலும், ராகுல் தூக்கிட்ட நிலையிலும் இறந்து கிடந்தனர். அவர்களது உடல்களை காவல்துறையினர் மீட்டு, உடற்கூறாய்வுக் காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் மூலம் வீடு முழுவதும் ஆய்வு செய்ததில், வேறு யாரும் வந்து செல்ல வில்லை என்பதை காவல்துறையினர் உறுதி செய்த னர். அப்போது, ராகுல் எழுதிய கடிதம் ஒன்று காவல்துறை யினருக்கு கிடைத்தது. பின்னர் நடந்த விசாரணையில், ராகுல் கடந்த நவ.15 அன்று தனது நண்பர்களை பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கழிவறையில் ஈஸ்வரி இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்து ராகுல் அழுதுள்ளார். பிறகு, ராகுல் தனது தந்தையும் இல்லை, தாயும் இல்லை என்பதால், வீட்டின் ஜன்னல் மற்றும் வாசல் கதவுகளை உள்பக்கமாக பூட்டி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலை தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார் என தெரிய வந்துள்ளது.
மகிமலை ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணி தீவிரம்
மயிலாடுதுறை, நவ.19- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள காழி யப்பநல்லூர் பகுதிகள் வழியாக செல்லக்கூடிய மகிமலை ஆறு மற்றும் உப்பனாறுகளில் படர்ந்துள்ள ஆகா யத்தாமரை செடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தரங்கம்பாடி வட்டத்தில் விவசா யிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகின்ற மகிமலை ஆற்றினை நம்பி, தில்லையாடி, திருவிடைகழி, காழியப்பநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த விவசா யிகள் தற்போது சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் சம்பா சாகுபடி பணி யில் ஈடுபட்டுள்ளனர். இந்த மகிமலை ஆற்றினை பாசன வசதி மற்றும் வடிகால் ஆறாக விவசாயிகள் பயன் படுத்தி வருகின்றனர். தில்லையாடி கிராமத்தில் உள்ள மகிமலை ஆற்றின் குறுக்கே அமைக் கப்பட்டுள்ள உபரி நீரொழுங்கி வழி யாக கடலுக்கு செல்லக்கூடிய உப்ப னாற்றிலும் மகிமலை ஆற்றிலும் அதிக அளவு ஆகாயத்தாமரை மற்றும் சம்பந் தட்டைச் செடிகள் படர்ந்துள்ளதால் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் இருந்தது. இப்பகுதியில் சம்பா நடவு செய்த வயல்களில் தண்ணீர் விடுவதற்கு தில்லையாடி உப்பனாறு மற்றும் மகி மலை ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகள் மற்றும் சம்பந்தட்டை களை உடனடியாக அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று நீர்வளத்து றையினர் கடந்த இரண்டு நாட்களாக ஆகாயத்தாமரையை அகற்றும் பணி யில் ஈடுப்பட்டு வருகின்றனர். கனமழை யிலும் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காழியப்பநல்லூர் கண்ணப்பன்மூலை பகுதியில் நீர்வளத்துறை செயற் பொறி யாளர் விஜயபாஸ்கர், உதவி பொறியா ளர் ரவீந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
குழந்தைகள் நல குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு
பெரம்பலூர், நவ.19- குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் வெளியிட்டுள்ளார். குழந்தை நலக்குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவி அரசுப்பணி அல்ல. குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனிதமேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றும், குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவாராக இருத்தல் வேண்டும். அல்லது இத்துறைகளில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறைசார்ந்த (https://dsdcpimms.tn.gov.in) இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் இப்பதவியிடங்களுக்கு அதற்கான உரிய படிவத்தில் 15 தினங்களுக்குள், இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 600 010 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும், தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விவசாயத் தொழிலாளர் சங்க போராட்டம் வெற்றி புத்தாம்பூர் நடுத்தெரு காலனி வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை
புதுக்கோட்டை, நவ.19 - புதுக்கோட்டையை அடுத்த புத்தாம்பூர் நடுத்தெரு காலனி வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி கள் உறுதியளித்துள்ளனர். இது அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி யாகும். புதுக்கோட்டை ஒன்றியம் புத்தாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட நடுத்தெருவில் பட்டிய லின மக்களுக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாடு அரசால் காலனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. ஆனால், அந்த வீடுகளில் வசிப்பவர்கள் பெயரில் மனைப்பட்டா இல்லை. மனைப்பட்டா கேட்டு அந்த மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுள்ளனர். ஆனால், பட்டா வழங்கப்படவில்லை. தற்போது அந்த இடம் தனக்குச் சொந்தமானது என்று கூறி தனி நபர் பிரச்சனை செய்து வருகிறார். எனவே, புத்தாம்பூர் நடுத்தெரு மக்க ளுக்கு பட்டா வழங்கக் கோரியும், செம்பாட்டூர் ஊராட்சி வள்ளி நகரில் வசிக்கும் மக்க ளுக்கு மனைப் பட்டா வழங்கக் கோரியும், செம்பாட்டூர் ஊராட்சி ராஜகுளத்தூர்-வளச் சேரிப்பட்டி அருகே தனியார் கல்குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை (நவ.18) புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவல கம் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை வட்டாட்சியர் பரணி தலைமையில் நகர காவல் ஆய்வாளர் மருது முன்னிலையில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடை பெற்றது. பேச்சுவார்த்தையில் விதொச மாவட்டச் செயலாளர் டி.சலோமி, விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் டி.லட்சாதிபதி மற்றும் ராஜா, முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில், “புத்தாம்பூர் நடுத்தெருவில் குடியிருப்பவர்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறை மூலம் நிலமெடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, பட்டா வழங்கு வது எனவும், வள்ளி நகரில் வசிக்கும் மக்க ளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் பட்டா வழங்க ஏற்கனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தனியார் கல்குவாரி தொடர்பாக பொதுமக்களின் ஆட்சேபணை பதிவு செய்து அரசுக்கு ஏற்கனவே முன்மொழிவு அனுப்பப்பட்டு உள்ளதாகவும்” அதிகாரிகள் எழுத்துப்பூர்வ மாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.