districts

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஏப்.21 - இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி மொழியை திணிப்பதை கண்டித்தும், மத்திய  பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வு அறிவிப்பை திரும்பப் பெற கோரியும் மயி லாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலா ளர் டி.ஜி.ரவி, நகரச் செயலாளர் துரைக்கண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். தரங்கம்பாடி ஒன்றியம் இலுப்பூர்-சங்கரன்பந்தல் கடைவீதியில் மாவட்டக்குழு உறுப்பினர் காபிரியேல் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ராணி, கிளை  செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  ஆக்கூரில் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்  பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.சிம்சன் உள்ளிட்டோர் உரையாற்றினர். குத்தாலத்தில் ஒன்றிய செயலாளர் சி.விஜய காந்த் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத் தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டா லின் உரையாற்றினார்.

;