திருவாரூர், பிப்.9- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட அரிச்சபுரம், ரிஷியூர், மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட துண்ட கட்டளை, திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட கீரக்கலூர், திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட கோமல் ஆகிய இடங்களில் ஒன்றியக் குழுவினர் ஆய்வு நடத்தினர். இப்பகுதி களில் உள்ள நேரடி கொள்முதல் நிலை யங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஒன்றிய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு கட்டுப்பாடு மையத்தின் தொழில்நுட்ப அலுவலர்கள் சி.யூனுஸ் (சென்னை), பி.பிரபாகரன் (பெங்களுரு) உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர், மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ முன்னிலை யில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், முதுநிலை மண்டல மேலாளர் (நுகர்பொருள்) இராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ சாயம்) ஏழுமலை மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனார்.