districts

img

ஒன்றிய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் தோகைமலையில் காவல்துறையினர் அடக்குமுறை

கரூர், பிப்.13- ஒன்றிய அரசின் விவ சாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் விரோத 2023க்  கான நிதிநிலை அறிக்கை யை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவ சாயத் தொழிலாளர் சங்கம்  தோகைமலை ஒன்றியக் குழு சார்பில் தோகைமலை பேருந்து நிலையம் முன்பு நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவ சாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் கே.சக்திவேல் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ. பெருமாள், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் டி. செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நகல் எரிக்கும்போது காவல்துறையினர் கடுமை யாக எதிர்ப்பு தெரிவித்து அடக்குமுறையை கையா ண்டனர்.  இதனால் காவல்  துறையினருக்கும், போராட்  டக்காரர்களுக்கும் இடையே  தள்ளு, முள்ளு ஏற்பட்டது.  போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது தோகைமலை காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்தனர்.