கரூர், ஜூன் 13 - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கரூர் லைட் ஹவுஸ் குமரன் பள்ளியில் நடைபெற் றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.எஸ்.பாஸ்கரன் தலைமை வகித்தார். கெளரவத் தலைவர் தீபம் சங்கர் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஐ.ஜான்பாஷா வரவேற்று பேசினார். தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலை வர் பேராசிரியர் திருநாவுக்கரசு, யூனிசெப் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்ட மிடுதல் பற்றி எடுத்துரைத்தார். அனைத்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில ளித்தார். இதில் மாவட்ட துணைத் தலைவர் ஆரோக்கிய பிரேம்குமார், ஜெயமணி, பச்சை முத்து, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலாளர் பொன் ஜெயராம் நன்றி கூறினார். கரூரில் யூனிசெப் நிறுவனத்தின் செயல் பாடுகள் குறித்து இளைஞர்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நல வாழ்வு மற்றும் கல்வியில் பின்தங்கி உள்ள வர்களுக்கு உதவும் வகையிலும் கிராமப்புறத் தைச் சேர்ந்த இளைஞர்களை நல் வழிப்படுத் தவும் அவர்களுக்கு வேலைவாய்ப்பை உரு வாக்கும் வகையில் பயிற்சி அளிக்கவும், பெண் களுக்கு அவர்கள் சுயமாக சம்பாதிப்பதற்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அறிவியல் இயக்க செயல்பாடுகளில் சென்னை, மதுரை, கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களை தேர்வு செய்து, யூனிசெப் நிறுவனம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் மாவட்டத்தில் திட்டமிட்டு மொத்தம் 20 கிராமங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரம் மாணவர்களை இணைப்பதற்கு இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனுடைய செயல்பாடுகள் ஜூலை மாதம் துவங்க உள்ளன. இதன் பணிகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் திட்டமிடப் பட்டது.