திமுக வேட்பாளரை ஆதரித்து உ.வாசுகி பிரச்சாரம் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் சேத்தூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிபிஎம் சேத்தூர் நகரச் செயலாளர் குரு நாதன் தலைமை வகித்தார். மூத்த தோழர் தங்கவேல், கமிட்டி உறுப்பினர் குருவு முன்னிலை வகித்தனர். மத்தி யக்குழு உறுப்பினர் உ.வாசுகி தேர்தல் பரப்புரையாற்றினார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ராமர், ஒன்றியச் செயலாளர் சந்தனகுமார், திமுக பேரூர் கழக செயலாளர் சிங்கம்புலி, அன்னாவி, சேத்தூர் பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் நகரத் தலைவர் நச்சாடலிங்கம், சிபிஐ நகரச் செயலாளர் ராஜா, மதிமுக நகரச் செயலாளர் அய்யணப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி துணைச் செயலாளர் ஊமைத் துரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அல்லா பிச்சை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.