districts

img

கடலோரக் கிராமத்தில் “மீன் முள்” பாத்தி அமைத்து அலையாத்திக் காடு உருவாக்க முயற்சி!

புதுக்கோட்டை, டிச.21-  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடலோரக் கிராமப் பகுதியில் மீன் முள் வடிவில் பாத்தி அமைத்து அலையாத்திக் காட்டை உருவாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வங்கக் கடல் புதுக்கோட்டை மாவட்டத் தின் கிழக்குப் பகுதியில் சுமார் 43 கிமீ தொலைவுக்கு அமைந்துள்ளது. இதில், அறந்தாங்கி வனச் சரகத்துக்கு உள்பட்ட மும்பாலை கடலோரக் கிராமத்தில் அலை யாத்திக் காட்டை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் வனப் பரப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள தமிழகப் பசுமை இயக்கம் (ஜிடிஎம்) சார்பில் இந்தப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. தெற்கு வெள்ளாறு கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியைத் தேர்வு செய்துள்ள வனத்துறையினர், 1,600 மீட்டர் தொலை வுக்கு மீனின் நடுமுள்ளாகவும், 93 கிளைகளைப் பக்கவாட்டு முள்போலவும் வடிவமைத்து வாய்க்கால் வெட்டி பாத்தி யை உருவாக்கியுள்ளனர். பக்கவாட்டு வாய்க்கால்கள் மட்டும் சுமார் 8,500 மீட்டர் தொலைவுக்கு வெட்டப்பட்டுள்ளன. பிரதான வாய்க்காலில் ஒரு மீட்ட ருக்கு ஒரு விதை வீதமும், கிளை வாய்க்கால் களில் ஒரு மீட்டருக்கு 5 விதைகள் வீதமும் என மொத்தம் சுமார் 44,100 விதை கள் நடவு செய்யப்பட்டுள்ளன. காலை நேரத்தில் கழிமுகப் பகுதி தண்ணீர் வாய்க்காலில் முழுமையாகவும், மாலை நேரத்தில் வடிந்தும் காணப்படும். கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இந்த வாய்க்கால் வெட்டி விதைகள் விதைக்கப்பட்ட இப்பணியில் தற்போது ஆங்காங்கே அலையாத்தி செடிகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. பேரிடர் சேதத்தை குறைக்கும் இந்தத் திட்டம் குறித்து மாவட்ட வன அலுவலர் எஸ்.கணேசலிங்கம் கூறுகை யில், ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை கடலோரப் பகுதி யில் அலையாத்திக் காடுகள் உற்பத்தி செய்யும் பணிகளை வனத்துறை மேற் கொண்டுள்ளது. தற்போது, தண்ணீர் எளிதில் வந்து செல்லும் முயற்சியாக “மீன் முள்” வடிவப் பாத்தியை மேற் கொண்டிருக்கிறோம். அலையாத்திக் காடுகள் கடற்கரையில் மண் அரிப்பைத் தடுக்கவும், பெரும் புயல் போன்ற பேரி டர் காலங்களில் நிலப்பரப்பின் மீதான சேதத்தைக் குறைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதால், தற் போதைய பசுமை இயக்கத்தின் கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது என்றார்.  அறந்தாங்கி வனச்சரக அலுவ லர் டி.மணிவெங்கடேஷ்; கூறுகை யில், இத்திட்டத்துக்காக இராமநாத புரம் கடலோரப் பகுதிகளான சுந்தர பாண்டியபுரம், தொண்டி, காரங்காடு பகுதிகளிலுள்ள அலையாத்திக் காடுகளுக்குச் சென்று விதைகளை சேகரித்து வந்ததாகக் குறிப்பிட்டார். பல்லுயிர்ப் பெருக்கத்திற்காக... இப்பகுதியின் வனவர் கோ. நாகராஜன் கூறுகையில், சில விதைகள் முளைக்காமல் போய்விடலாம் என்பதற் காக அடுத்தடுத்த சில மாதங்களில் மீண்டும் முளைக்காத இடங்களைப் பார்த்து மேலும் விதைகளை நடவு செய்ய விருக்கிறோம். இதுபோல 5 முறை விதை களை நடவு செய்யவிருக்கிறோம். அலை யாத்தி செடிகள் வளர்ந்துவிட்டால், பூமிக் கடியில் நன்றாக வளர்ந்து, பக்கவாட்டுப் பகுதிகளில் பரவி மேலே எழுந்து இலை களைத் தரும். அதாவது, ஆலமரத்தின் விழுதுகள் மேலிருந்து கீழாக வந்து பிர தான மரத்தைத் தாங்குவதைப் போல, அலையாத்தி செடிகள் கீழிருந்து மேலாக அதிக கிளைகளைப் பரப்பும் தன்மை கொண்டது என்கிறார்.  அலையாத்திக் காடுகள் வெறுமனே பேரிடர்களில் இருந்து நிலப்பரப்பைக் காக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், அடர்ந்து வளரும் காட்டுக்குள் பல  வகையான மீன்கள் உள்ளிட்ட உயிரினங் கள் வளர்ந்து வெளிநாட்டுப் பறவை களின் வரத்து உள்ளிட்ட பல்லுயிர்ப் பெருக் கத்தைத் தரும் என்பது முக்கியமானது.