districts

img

திருச்சி தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தை காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்

திருச்சிராப்பள்ளி, செப்.27 - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சியின்  வாயிலாக திருச்சி மத்திய பேருந்து நிலையம்  அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத் தின் தரை தளத்தில் மணமகன், மணமகள் அறைகளுடன் 110 பேர் அமரக்கூடிய கூட்ட  அரங்கம் மற்றும் 3 தளங்களில் 15 அறைகள்  என நவீன வசதிகளுடன் ரூ.4 கோடியே 17  லட்சத்து 10 ஆயிரம் செலவில் கட்டப்பட் டுள்ள புதிய தங்கும் விடுதியினை செவ்வாய் கிழமை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதனையொட்டி திருச்சி தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் தீனதயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;