திருச்சிராப்பள்ளி, அக்.14- திருச்சி என்.ஆர். ஐஏஎஸ் அகாடமி, திருச்சி பீனிக்ஸ் ரோட்டரி கிளப் இணைந்து ‘சொல்லுங்கள் வெல்லுங்கள்’ என்ற வினாடி -வினா போட்டியை நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு அகாடமி தலைவர் ஆர்.விஜயாலயன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் (தேர்வு) ராஜா கோவிந் தசாமி, ரோட்டரி இன்டர்நேசனல் மாவட்டம் 3000-ன் 2024-25 ஆண்டுக்கான மீடியா பப்ளி சிட்டி ஆபிஸர் கே.ஸ்ரீனிவாசன், சங்கச் செயலாளர் அப்துல்லா, துளசி பால சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் திருச்சி மட்டு மின்றி, மாநிலம் முழுவதும் இருந்து 1500-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறு பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000, 2 ஆம் பரிசாக ரூ.10000, 3 ஆம் பரிசாக ரூ.7000, 4 ஆம் பரிசாக பரிசாக 5000, 5 ஆம் பரி சாக ரூ.2500, 6 ஆம் பரிசாக ரூ.1500 மற்றும் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.