districts

மக்கள் குறைகளைத் தீர்க்க உத்தரவிட்ட திருச்சி மேயர்

திருச்சிராப்பள்ளி, ஆக.19- திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மக்கள் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்  மேயர் அன்பழகன். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடை பெற்ற மக்கள் குறைதீர் முகாமில்  பெரியார்  நகர் நலச்சங்கத்தினர், “பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிந்து பகுதிகளில் சாலை அமைக்க வேண்டும். பணிகள் முடிவுற்ற பகுதியில் குடிநீர் சீராக வழங்கவேண்டும். பழைய பூங்காவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட வேண்டும். பூங்காவை முறை யாகப்  பராமரிக்க வேண்டும். விடுபட்ட பகுதி களுக்கு பாதாளச் சாக்கடை அமைக்க வேண்டுமென மேயர் அன்பழகனிடம் மனு அளித்திருந்தனர்.   இதையடுத்து மேயர் அன்பழகன்  மண்ட லத் தலைவர் துர்காதேவி,  மாமன்ற உறுப்பி னர் கலைச்செல்வி மற்றும் அதிகாரிகள்  சம்மந்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து பதாள சாக்கடை முடிவுற்ற பகுதிகளில் உடனடியாக குடிநீர் வழங்க வும், பூங்காக்களைப் பராமரிக்கவும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்  பாதாள சாக்கடைப் பணிகள் முடிந்தவு டன் தார் சாலை அமைக்கப்படும் எனக் கூறிய  மேயர், விடுபட்ட பகுதிகளுக்கு பாதாளச் சாக்கடைத் திட்டம்- பகுதி-4-ன் கீழ் குழாய் பதிக்கும் பணி விரைவில் பணிகள் தொடங் கப்படும் என்றார். முன்னதாக மேயர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளை பார்வை யிட்டார். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை  சிறுநீர் கழிப்பிடம், கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் ஒப்பந்த தாரர்களுக்கு உத்தரவிட்டார்.