திருச்சிராப்பள்ளி, செப்.9 - திருச்சிராப்பள்ளி மாநகராட்சியை 65 வார்டுகளில் இருந்து 100 வார்டுகளாக உயர்த்த அருகில் உள்ள சில ஊராட்சி களை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு சில ஊராட்சிகளின் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். அந்த வகையில் திங்களன்று திருச்சி தாயனூர் ஊராட்சியைச் சேர்ந்த பொது மக்கள் நூற்றுக்கணக்கானோர் ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஆட்சியரை சந்திக்க அனுமதி கேட்டனர். அப்போது காவல்துறையி னர் ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்க இயலும் என கூறியதால், தாய னூர் பொதுமக்கள் ஆட்சியர் அலுவல கம் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் ஏற்கனவே எடுத்து வந்த மண்வெட் டியை தூக்கிப் பிடித்து ‘வேண்டாம் வேண்டாம் மாநகராட்சி வேண்டாம்’ என கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவ லகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது: எங்கள் ஊரில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் விவசாயக் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரு கிறோம். தாயனூர் கிராமம் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்தது. 75 சத வீத நிலங்கள் விவசாய நிலங்களாக உள்ளன. காவிரி ஆற்றுப் பிரிவான பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தாயனூர் ஊராட்சியை மாநகராட்சி யுடன் இணைப்பதாக செய்தி வெளி யானதை அறிந்து அதிர்ச்சி அடைந் தோம். மாநகராட்சியுடன் இணைத்தால் உரிமைகளும், சலுகைகளும் பறிபோ கும். நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் பறிபோகும். மாநகராட்சியுடன் இணைப்பதால் பொதுமக்களுக்கு அதிக நிதி சுமை ஏற்படும். ஆகவே தாயனூர் ஊராட்சியை மாநகராட்சி யுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையில், “விருப்பப்பட்டு இணைந்தால் மட்டுமே இணையலாம். விருப்பம் இல்லை என்றால் எழுத்துப் பூர்வமாக இணையவில்லை எனக் கொடுத்தால் மாநகராட்சியுடன் அந்த ஊராட்சி இணைக்கப்படாது” என்று நக ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.