districts

மல்லியம்பத்து ஊராட்சியில் நிதி முறைகேடு  தலைவரிடம் விளக்கம் கேட்டு  திருச்சி ஆட்சியர் நோட்டீஸ்

திருச்சிராப்பள்ளி, மே 18 - திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் மல்லியம்பத்து  ஊராட்சியில் வீட்டு வரி, குடிநீர் வரி. தொழில் வரி மற்றும் பல  வரிவகைகளை ஊராட்சி நிதியில் செலுத்தாமல் மோசடி செய்த தாக புகார் எழுந்தது. இதுகுறித்து கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பினர்.  இந்நிலையில் பஞ்சாயத்து தலைவருக்கு ஆட்சியர் சிவராசு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், மல்லியம்பத்து ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்ற நாளிலிருந்து செலவு  சீட்டுகள் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும், போலி யான ரசீதுகள் மூலம் ரூ.74 லட்சம் கையாடல் செய்து முறை கேடு நடந்துள்ளது.  ஊராட்சி தலைவராக பதவி ஏற்ற போது எடுத்த உறுதி மொழியை மீறி அரசுக்கு எதிராக செயல்பட்டுள்ளதால் இதற்கு  விளக்கம் கேட்கப்படுகிறது. 15தினங்களுக்குள் உரிய ஆவ ணங்களுடன் விளக்கமளிக்க வேண்டும். தவறினால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.