districts

img

திருச்சி காவேரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 16 -  

      தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம் ஆண்டுதோறும் ஜூலை 15 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  

   இதையொட்டி திருச்சி கண் டோன்மெண்ட் பகுதியில் உள்ள காவேரி மருத்துவமனையில் வெளிநோ யாளிகளுக்கான பிரத்யேக பிளாஸ்டிக்  அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப் பட்டுள்ளது. தொடக்க விழாவுக்கு காவேரி மருத்துவமனை குழுமத்தின்  இணை நிறுவனரும், செயலாக்க இயக்குநருமான டாக்டர் செங்குட்டு வன் தலைமை வகித்தார்.

   திருச்சி காவேரி மருத்துவமனையின் பிளாஸ்டிக்  அறுவை சிகிச்சை துறையின் தலை வர் டாக்டர் எஸ்.கந்தா முன்னிலை வகித்தார்.  சென்னை மருத்துவக் கல்லூரியின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை யின் முன்னாள் தலைவர் மரு.ஜெ. ஜெயமோகன், சென்னை அரசு ஓமந்தூ ரார் மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு துணைத்தலை வர் ஜி.கார்த்திகேயன் ஆகியோர் இந்த புதிய பிரிவை தொடங்கி வைத்த னர்.

   இதுகுறித்து மருத்துவர் செங்குட்டு வன் பேசுகையில், “வெளி நோயாளி களுக்கான இந்த புதிய பிரிவு மூலம் ஒரு ஆண்டில் சுமார் 5 ஆயிரம் முதல் 7  ஆயிரம் நோயாளிகள் வரை சிகிச்சை பெறமுடியும். தீக்காயத்திற்கு பிந்தைய சிகிச்சை, பராமரிப்பு, புற்றுநோய் பாதிப்பிற்கு மறு சீரமைப்பு என்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் பல்வேறு அம்சங்களிலும் பிரத்யேக சேவைகளை வழங்குகிறது.  

    நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ள பாதத்தை நுண் அறுவை சிகிச் சையின் மூலம் மறு சீரமைப்பு செய்வ தில் இந்த பிரிவு சிறப்பாக திகழும். ஒரு  பச்சிளம் குழந்தைக்கு பாத உறுப்பு  பதியம் உள்பட பல தனித்துவமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறைக்கு  இந்த கல்வியாண்டு முதல் நேஷனல் போர்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி டிப்ளமேட் இருக்கைகள் ஒதுக்கீடு செய் யப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இந்த கல்வித்திட்டத்தை தமிழ்நாட்டில் வழங்கும் தனியார் துறையை சேர்ந்த 4-வது மருத்துவ கல்வி நிறுவனம் என்ற பெருமையை காவேரி மருத்துவ மனை பெற்றிருக்கிறது” என்றார்.