districts

திருச்சி காவேரி மருத்துவமனையில் சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

திருச்சிராப்பள்ளி, ஏப்.28-

   திருச்சி காவேரி மருத்துவமனை கதிர்வீச்சு சிகிச்சையியல் துறைத் தலைவரும் முது நிலை ஆலோசகரமான மரு.செந்தில் வேல் முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மரபணு கோளாறு சிறுநீரகங்களை பாதித்த தால் ஓராண்டாக டயாலிசிஸ் சிகிச்சை மேற் கொண்டு வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயதான சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய  நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

\  இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை தனது மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற கோரிக் கையுடன் எங்களது மருத்துவமனையை நாடி  வந்தார்.

   மேலும் அவர் தனது ஒரு சிறுநீரகத்தை மகனுக்கு தானமாக கொடுக்க முன் வந்தார். ஆனால் அந்த சிறுவனின் இரத்த வகைக்கு அது பொருத்தமானதாக இல்லை.  

   நாட்டில் பல மருத்துவமனைகளில் சிறு நீரக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது. ஆனால் சிறுவர்களுக்கு மட்டுமே  ஏபிஓ இணக்கமற்ற சிறுநீரக உறுப்பு மாற்று  அறுவை சிகிச்சைகள் சில மருத்துவ மனைகள் மட்டுமே மேற்கொள்கின்றன. இதி லும் தானம் அளிக்க முன்வந்த அந்த சிறுவ னின் தந்தையின் சிறுநீரகம் சிறுவனுக்கு பொருத்தமற்றதாக இருந்ததால், உறுப்பு  மாற்ற சிகிச்சையில் சிறுநீரகம் நிராகரிக்கப் படும் இடர்பாடுகளும் இருந்தன.

   பின்னர் நவீன முறையில், ‘ஓ’ ரத்த வகையை சேர்ந்த அந்த சிறுவனுக்கு, ‘ஏ’  ரத்த வகையைச் சேர்ந்த சிறுவனின் தந்தை  சிறுநீரகம் மாற்றப்பட்டது.

   ஆனால் சிறுநீரகவியல் துறை தலைவர் மரு.டி.ராஜராஜன் மற்றும் சிறுநீரக பாதை யியல் துறைத் தலைவர் மரு.செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் சிறுநீரகவியல் சிறப்பு நிபுணர் மருத்துவர்கள் ஜி.பாலாஜி, சசிகுமார் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர், மிக குறைந்த செலவில் ஜனவரி 19-ஆம் தேதி சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.

    நிகழ்வில் மகனுக்கு சிறுநீரகம் தானமாக  வழங்கிய அவனது தந்தை வீடியோ காலில்,  காவேரி மருத்துவமனை நிர்வாகம் நம்பிக்கை அளித்து தமது மகனை உயிர் பிழைக்க வைத்ததாக கண்ணீர் மல்க நன்றி  தெரிவித்தார்.