திருச்சிராப்பள்ளி, பிப்.16 - திருச்சி மாநகராட்சி 47 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக தலை மையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோ.வெற்றி செல்வம் அம்பேத்கர் நகர் பகுதியில் புத னன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடு பட்டார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ரேணுகா, கார்த்திகேயன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சரஸ்வதி, பகுதி செயலாளர் விஜயேந்திரன், பகுதி குழு உறுப்பினர் சீனிவாசன், புவனேஸ்வரி, ரயில்வே ஓய்வு பெற்ற ஊழியர்கள், போக்குவரத்து சங்கத்தினர் உள்ளிட்ட பலர் வீடு வீடாக சென்று அரிவாள், சுத்தியல் நட்சத் திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.