districts

img

திருச்சி 35 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் சுரேஷ் வாக்குச் சேகரிப்பு

திருச்சிராப்பள்ளி, பிப்.16 - திருச்சி மாநகராட்சி 35 ஆவது வார்டு  மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக தலை மையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.சுரேஷ், அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில் புதனன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடு பட்டார். வாக்கு சேகரிப்பின் போது, திமுக  வட்ட செயலாளர் தங்கவேல், அவைத்தலை வர் சாகுல்அமீது, வட்ட துணைச் செயலா ளர் ரசாக், தமுமுக வட்ட செயலாளர் முஜி பூர், இப்ராகிம்ஷா மதிமுக வட்ட செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெய பால், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கனல் கண்ணன், விவசாய தொழிலாளர்கள் சங்க  மாவட்ட செயலாளர் தங்கதுரை, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சம்சுதீன் உள்பட கூட்டணி கட்சியினர் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கள் சேகரித்தனர்.