பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திட்டங்கள் ஆய்வு கூட்டம்
தஞ்சாவூர், நவ.5- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் தொடர் பாக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் ஆணையர் முனைவர் இரா. நந்தகோபால் தலைமை யில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்பட்டு வரும் கடன் உதவி திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகை, விலையில்லா தையல் இயந்திரம், தேய்ப்பு இயந்திரம் வழங்கல், நல வாரியங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முறைகேடான பட்டாவை ரத்து செய்ய கோரிக்கை
பாபநாசம், நவ.5 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் குப்பைமேட்டில் முறைகேடாக வழங்கப்பட்ட குடிமனைப் பட்டாவை ரத்து செய்ய வேண்டும். சமுதாயக் கூடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும். பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் கழிவறை கட்ட வேண்டும். பண்டாரவாடை நிலுவை இனத்தை ரத்து செய்ய வேண்டும். வேம்பக்குடி ஊராட்சி யில் குடிநீர், தரமான சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் காதர் ஹீசைன் தலைமை வகித்தார். பாபநாசம் ஒன்றியச் செயலர் முரளிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கும்பகோணம் நவ.5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காவல்துறை கும்பகோணம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக கும்ப கோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில், காவல் துணை கண்காணிப்பாளர் வி.அசோகன் தலைமை யில், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. தலைக் கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு புதிய தலைக்கவசம் வழங்கி யும், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வந்த வர்களுக்கு இனிப்பு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆர்.சரவணகுமார் மற்றும் காவலர்களுடன் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பொன்னமராவதி, நவ.5- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரையில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. 230 ஏக்கர் பரப்ப ளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 202 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கண்மாய் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக வந்த புகார்களை அடுத்து, வருவாய் - பொதுப்பணி துறையினர் காரையூர் போலீசார் பாதுகாப்புடன் கண்மாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, சுமார் 8.75 ஏக்கரில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
தஞ்சாவூர், நவ.5- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.ரெங்கசாமி வேலை அறிக்கை வாசித்தார். மாநிலச் செயலாளர் எஸ். கோதண்டபாணி சிறப்புரையாற்றினார். நிலுவைக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியு றுத்தி நவ.8 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை), மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தஞ்சையில் சிறப்பாக நடத்துவது. தலை நகர் தில்லியில் டிச.8 அன்று ஒன்றிய, மாநில அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் நடைபெறவுள்ள கருத்த ரங்கம், டிச.9 அன்று நடைபெற உள்ள அலுவலக கட்டட திறப்பு, டிச.17 அன்று சேலத்தில் நடைபெறவுள்ள மாநிலப் பேரவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக, அரசு ஊழியர் சங்கத்தின் பட்டுக் கோட்டை வட்டக் கிளை பேரவை, வட்டக் கிளை துணைத் தலைவர் ஆர்.சாந்தலிங்கம் தலைமையில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் துவக்க வுரையாற்றினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் கை.கோவிந்தராஜன் பேசினார். மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி பேசினார்.
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, நவ.5 - ரயில் பயணத்தில் 60 நிரம்பிய ஓய்வூதியர்களுக்கான பயணச் சலுகையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியு றுத்தி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ம.வெள்ளைச்சாமி மற்றும் நிர்வாகிகள் பேசினர்.
திருவாரூர்
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி. சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.முனியன், மாநில துணைத்தலைவர் டி.குப்பன் ஆகி யோர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினர். மாநில செயலாளர் குரு.சந்திரசேகரன் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.