10 ஆடுகள் திருட்டு
அறந்தாங்கி, நவ.1- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே மாவடிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் வீட்டில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் கொட்டகையில் கட்டி வைத்திருந்த 10 ஆடுகளை திருடர்கள் குறிவைத்து திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து நாகுடி போலீசில் சேகர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இதேபோல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆவணம், பெருங்குடி ஆகிய கிராமங்களில் ஆடு களை மர்ம நபர்களை திருடிச் சென்று விட்டனர். மீமிசல் அருகே உள்ள கிளாறவயல் கிராமத்திலும் ஆடுகள் திருடு போய் உள்ளன. இப்பகுதியில் ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே போலீ சார் உடனடியாக ஆடு திருடும் நபர்களை கண்டறிந்து, கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
அறந்தாங்கி, நவ.1- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றி யத்திற்கு உட்பட்ட இடையாத்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் விக்னேஷை, மண மேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் அழைத்துச் சென்று தலைமை ஆசிரியர் உதவியுடன் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். இக்களப் பணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் அங்கையற்கண்ணி, சிறப்பு ஆசிரியர்கள் மணிமேகலை, கோவேந்தன் ஆகி யோர் ஈடுபட்டனர்.
தமிழ் வளர்ச்சி நாள் கருத்தரங்கம்
திருச்சிராப்பள்ளி, நவ.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டக் குழு சார்பில் உப்பிலியபுரம் ஒன்றியம் கிருஷ்ணாபுரத்தில் செவ்வாயன்று தமிழ் வளர்ச்சி நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உப்பிலிய புரம் ஒன்றியச் செயலாளர் இரா.முத்துகுமார் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் டி.வி.அன்பழகன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் சிறப்புரையாற்றினார். மூத்த தோழர் ஆர்.சுப்பிரமணி யன், துறையூர் ஒன்றிய செயலாளர் எம்.ஆனந்தன், தாத்த யங்கார்பேட்டை ஒன்றிய செயலாளர் எஸ்.பாண்டியன் ஆகியோர் பேசினர்.
விளையாட்டு விழா
தஞ்சாவூர், நவ.1- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனரும், முன்னாள் வருவாய்த்துறை அமைச்சருமான எஸ்.டி.சோமசுந்தரம் நூற்றாண்டு விழா மற்றும் கல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா நடை பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பட்டுக்கோட்டை நெடுஞ்சா லைத்துறை மண்டல துணை பொறியாளர் விஜயகுமார், நெடுஞ்சாலைத்துறை அலுவலக மேற்பார்வையாளர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ப.சீனிவாசன் வரவேற்றார். தாளாளர் எஸ்.டி.எஸ் செல்வம் வாழ்த்திப் பேசினார். மாணவ, மாணவியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டி கள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மக்கள் குறைதீர் முகாம்
மயிலாடுதுறை, நவ.1- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொது மக்கள் வந்து மனுக்களை அளித்தனர். இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 32 மனுக்களும், வேலை வாய்ப்பு கோரி 24 மனுக் களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 40 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 28, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவி தொகை, வங்கிக்கடன், மாற்றுத் திறனாளி உபகரணங்கள் கோரி 25 மனுக்களும், அடிப் படை வசதி கோரி 10 மனுக்களும், மொத்தம் 159 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண் டும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக, வேளாண்மை இணை இயக்குநர் ஜெ. சேகர் 2018 ஆம் ஆண்டு கொடிநாள் நிதி (ரூ.3 லட்சம்) சேகரித்து சாதனை புரிந்ததற்காக, தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் வழங்கப்பட்ட வெள்ளிப்பதக் கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
ஆத்தாளூர் கோயில் நிலங்கள் நவீன முறையில் அளவீடு
தஞ்சாவூர், நவ.1 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங் கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இந்நிலையில், நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் உள்ள 2 ஹெக்டேர் 50.50 ஏர்ஸ் நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறை உரிமம் பெற்ற சர்வேயர்களைக் கொண்டு, ரோவர் மிஷின் மூலம் நவீன முறையில் அளவிடும் பணி நடைபெற்றது. இப்பணியினை தஞ்சாவூர் மாவட்ட, இந்து சமய அற நிலையத்துறை உதவி ஆணையர் நாகையா, ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் சங்கர், இந்து சமய அற நிலையத்துறை பேராவூரணி சரக ஆய்வாளர் அமுதா ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, திருக்கோயி லின் செயல் அலுவலர் தனலெட்சுமி மற்றும் திருக் கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.