districts

திருச்சி விரைவு செய்திகள்

குடவாசல் அரசு ஆண்கள்  பள்ளியில் முப்பெரும் விழா

குடவாசல், ஜன.24- திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொடையாளருக்கு பாராட்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா  ஆகிய முப்பெரும் விழாக்கள் பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கா.மோகன கிருஷ்ணன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர்  கழகத் தலைவர் ஆர்.முருகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுந்தரி முருகன், பேரூராட்சி  தலைவர் மகா லட்சுமி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு வாரூர் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணை தலைவருமான பூண்டி கே. கலைவாணன் சிறப்புரையாற்றினார்.   நூற்றாண்டு கண்ட இப்பள்ளிக்காக பல்வேறு பணி களை மேற்கொண்டு, பள்ளியை மேம்படுத்து வகை யில், பள்ளியின் முகப்பு நூற்றாண்டு நினைவு வாயில் வடிவமைப்பு, சுற்றுச்சுவர், தரைத்தளத்திற்கு பேவர் பிளாக் அமைத்தல், மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிறைவேற்றி கொடுத்த பள்ளியின் முன்னாள் மாணவரும், கும்பகோணம் ஆசிகா தங்க மாளிகை உரிமையாளருமான கொடையாளர் வி.ஏ. ஜெகபர் சாதிக்-ன் சமூகப் பணியை பாராட்டி நினைவு கேடயம் வழங்கப்பட்டது. பேரூராட்சி துணைத்தலைவர் குணசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


திறன் பயிற்சி வகுப்புக்கு  விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர், ஜன.24- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம் பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் அடிப்ப டையில் பல்வேறு பயிற்சியினை வழங்கி வருகிறது.  அதன் தொடர்ச்சியாக, தற்போது பன்னாட்டு நிறு வனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற அஸ்பைரிங் மைண்ட்ஸ் கம்ப்யூட்டர் அடாப்டிவ் டெஸ்ட் (Aspiring  Minds Computer Adaptive Test) பயிற்சி அளிக்கப் படவுள்ளது. இப்பயிற்சி பெற அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்  படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்  கான கால அளவு மூன்று மாதம், இப்பயிற்சிக்கான அனைத்து செலவுகளையும் தாட்கோ வழங்குகிறது. பயிற்சி முடிந்து தேர்வில் வெற்றி பெறும் மாணாக கர்களுக்கு AMCAT சான்றிதழ் வழங்கப்படும்.  இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம். எனவே இப்பயிற்சிக்கு தகுதி யுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விருப்ப முள்ள மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ  இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


கொசு ஒழிப்புப் பணி: கிராமங்களில் ஆய்வு

அரியலூர், ஜன.24- அரியலூர் மாவட்டம் மாத்தூர், காமரசவல்லி ஆகிய கிராமங்களில் மாவட்ட மலேரியா ஒழிப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், கொசுப்புழு மற்றும் உண்ணிகள் அழிப்பு பணி யில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர் களிடம், கொசு உற்பத்தியாவதற்கு காரணம் குறித்து  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சுகாதார ஆய்வாளர்கள் சிவராமன், விவின் மற்றும் கொசுப்  புழு அழிப்பு பணியாளர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா, உண்ணிக்  காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் குறித்து எடுத்து ரைத்தார். காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவ மனை சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தினார். தொடர்ந்து, திருமானூர் மற்றும் ஏலாக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் ஆய்வகங்களை பார்வையிட்டார்.


ஜன.27-இல் மனு அளிக்கலாம்

புதுக்கோட்டை, ஜன.24- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம், திரு மணஞ்சேரி வருவாய் கிராமத்தில் 8.2.2023 அன்று காலை 10  மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற  உள்ளது. மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 27.1.2023 அன்று காலை 10.30 மணியளவில் கறம்பக்குடி தாலுகா, திருமணஞ்சேரி கிராமத்தில் உள்ள  திருமேனிநாதர் திருமண மண்டபத்தில் முன்மனுக்கள் பெறப்பட உள்ளன. எனவே, இங்கு பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பய னடையுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மாணவனுக்கு எலும்பு முறிவு  

பெரம்பலூர், ஜன.24 - பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் ஊராட்சிக் குட்பட்ட தம்பை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தம்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகேஷ் (10) என்ற மாணவர்  4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் செவ்வாயன்று காலை வழக்கம் போல்  பள்ளிக்கு வந்த சரண்ராஜ், காம்பவுண்ட் இரும்பு கதவை  திறந்துள்ளார். அப்போது கதவின் மேல்பகுதியில் தேய்மானம் ஏற்பட்டிருந்ததால் மாணவரின் இடது தொடை யில் இரும்பு கதவு விழுந்தது. இதில் மாணவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த ஆசிரியர்கள், மாணவரை மீட்டு பெரம்ப லூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக மங்களமேடு காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.


திடீர் மழை: விவசாயிகள் கவலை

நாகப்பட்டினம், ஜன.24- நாகப்பட்டினத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 65  ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள் ளது. தற்போது பல்வேறு இடங்களில் நெல் அறுவடை  பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலையில், அறுவடை செய்த நெல்லை செவ்வா யன்று விவசாயிகள் சாலையில் கொட்டி காயவைத்துக் கொண்டிருந்த போது, திடீரென மழை பெய்ததால் கவலை  அடைந்தனர்.