districts

திருச்சி விரைவு செய்திகள்

பாரதிதாசன் பல்கலை.,  நடத்தும் தையல் பயிற்சி

திருச்சிராப்பள்ளி, ஜன.25- திருச்சி காஜாமலை வளாகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை சார்பில் ஜனவரி 28ஆம்  தேதி முதல் நவீன இயந்திரங்கள் மூலம் ஒருமாத தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.  இதற்கு, கல்வித்தகுதி, வயதுவரம்பு ஏதும் இல்லை. ஒருமாத தையல் பயிற்சி முதல் நிலை, இடை நிலை, இறுதிநிலை   என மூன்று மாதங்கள் வரை முழு மையான பயிற்சித் தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    தற்போது கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் பயி லும் மாணவ, மாணவிகளும் இணைந்து இப்பயிற்சி பெற,  ஒவ்வொரு நாளும் மூன்று பிரிவுகளில், குறைந்த கட்ட ணத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.  பயிற்சியில் சேர விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள்  மற்றும் மாற்றுப்பாலினத்தவர் இயக்குநர், மகளிரி யல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப் பள்ளி - 620023 என்ற முகவரியில் தொடர்பு கொள்ள வும். மேலும் விவரங்களுக்கு 9842773237 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 


பாமர இலக்கியம் சிறப்பு கருத்தரங்கம்

 தஞ்சாவூர், ஜன.25-  தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில், நாட்டுப்புற வியல் துறை சார்பில், பாமர இலக்கியம் சிறப்பு கருத்த ரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, தமிழ் பல்கலைக்  கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் நா.மாலதி வரவேற்றார். இதில் திரைப்பட இயக்குநரும், பாமர இலக்கியம் நூலா சிரியருமான கஸ்தூரிராஜா கலந்து கொண்டார். பதிவாளர் (பொ) சி.தியாகராஜன், மொழிப்புல முதன்மையர் ச.கவிதா, நாட்டுப்புறவியல் துறை தலை வர் இரா.காமராசு ஆகியோர் பேசினர். 


ஆறுகளில் கட்டுமான பணிகள் ஆய்வு

தஞ்சாவூர், ஜன.25-  தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில், ஆறு களில் நடைபெறும் கட்டுமானப் பணிகளின் தன்மை குறித்து மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெய ரஞ்ஜன் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டியில், கல்ல ணைக் கால்வாய் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், கல்ல ணைக் கால்வாய் குறுக்கே ரூ.4.30 கோடி மதிப்பீட்டில்,  கட்டப்பட்டு வரும் புதிய நீரொழுங்கி, திருவையாறு வட்டம்  நடுக்காவிரியில், காவிரி பாசன கட்டமைப்புகளை புனர மைத்து நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூ.12.93 கோடி மதிப்பீட்டில் தடுப் பணை, கும்பகோணத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 15.67 கோடி மதிப்பீட்டில் புதிய நீரொழுங்கி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இப்பணிகளை மாநில திட்டக்குழு துணைத் தலை வர் ஜெயரஞ்ஜன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கட்டு மானப் பணிகளின் தன்மை குறித்தும், பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் இளங்கோ, கண்காணிப்பு பொறியாளர் முருகேசன், கல்லணைக் கால்வாய் செயற்பொறியாளர் பாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.