ஆதார் எண் இணைக்கும் பணி
திருவாரூர், ஜூலை 27 - திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தாமாக முன்வந்து தங்களது ஆதார் எண்ணை ERONET, GARUDA APP, NVSP, VHA என்ற இணையதளத்தின் மூலமாக 6பி படிவத்தை பூர்த்தி செய்து இணைக்கலாம். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு நேரடி யாக வரும்போது படிவம் 6பி படிவத்தை பெற்று 12 இலக்க ஆதார் எண்ணை படிவத்தில் பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரி டம் திரும்ப கொடுக்க வேண்டும். வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டால் கள்ள வாக்குப்பதிவை குறைக்க இயலும். எனவே, திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் தங்க ளது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
தஞ்சாவூர், ஜூலை 27 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டச் சேர்க்கை க்கு விண்ணப்பிக்க, நுழைவுத் தேர்வு (TURCET 2020) எழுதித் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க 1.8.2022 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. TURCET 2020 இல் தேர்ச்சி பெற்றவர்கள், முனைவர் பட்டச் சேர்க்கைக்கு 2022 ஜூலை பருவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அதன்பிறகு TURCET 2020 தேர்வுத் தகுதி செல்லாது. NET, Set, UGC/JRF, GATE தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2022 பருவத்திற்குப் பிறகு முனைவர் பட்டச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடத்தப் பெறும் நுழைவுத் தேர்வினை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் என பதிவாளர் முனைவர் சி. தியாகராஜன் தெரிவித்தார். மேலும், தற்போது ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்டப் படிப்பு கள், முதுகலைப் பட்டப் படிப்புகள், முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 15.8.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://www.tamil university.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என தெரி வித்துள்ளார்.
சட்ட விழிப்புணர்வு முகாம்
முசிறி, ஜூலை 27 - திருச்சி மாவட்டம் முசிறி போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் இலவச சட்ட உதவிகள் பற்றிய விழிப்புணர்வு முகாம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வா ளர் சுமதி தலைமையில் நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருப்பதி, மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ், இலவச சட்ட உதவி குழு வழக்கறிஞர் பொன்குமார், வழக்கறிஞர்கள் பாலகிருஷ்ணன், சுகுமார் மற்றும் சமூக ஆர்வலர் கள் கலந்து கொண்டனத். போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் இலவச சட்ட உதவிகளை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு இலவச சட்ட உதவிகள் மையம் மூலம் எவ்வாறு தெரிந்து கொள்வது, போக்கு வரத்து விதிகள் பற்றி தெரிந்து கொள்வது போன்ற விழிப்புணர்வு கருத்து கள் எடுத்துரைக்கப்பட்டன.
திங்களூர் கோயிலில் கொள்ளை முயற்சி
தஞ்சாவூர், ஜூலை 27 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திங்களூரில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கைலாசநாதர் கோயில் உள்ளது. இங்கு நவக்கிரகங்களில் இரண்டாவது ஸ்தலமாக விளங்கும் சந்திரன் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, சந்திரன் சன்னதிக்கு பின்புறம் உள்ள சுற்றுச்சுவர் வழியாக மர்ம நபர்கள் கையில் இரும்பு கம்பி, சாக்குகளுடன் குதித்து கோயிலுக்குள் நுழைந்தனர். பின்னர், கை லாசநாதர் சன்னதியின் கதவு பூட்டை உடைத்து திறக்கும் போது, அலா ரம் ஒலிக்கத் துவங்கியது. அலாரம் சத்தத்தை கேட்டவுடன் கோயில் இரவுக்காவலர், கிராம மக்கள் உதவியுடன் கோவிலை திறந்த போது மர்ம நபர்கள் தப்பியோடினர். அலாரம் ஒலித்தால் நான்கு உண்டியல், ஐம்பொன் சிலைகள் தப்பின. பின்னர் திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ரமேஷ், சந்திரன் கோவில் கணக்கர் சிவக்குமார், திருவை யாறு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து விடிய விடிய ஊர் மக்கள் கோயில் முன்பு திரண்டிருந்தனர். கோயில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை காவல்துறை யினர் தேடி வருகின்றனர்.
கட்டிடப் பணிகளுக்கு பூமி பூஜை
கரூர், ஜூலை 27 - கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட காந்தி கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் உள்ள கிணற்றை சுற்றி தடுப்பு வேலை அமைப்பதற்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டிலும், காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாகனத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்குவ தற்கு தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டிலும், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.36 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ. 42 லட்சம் மதிப்பீட்டில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கிருஷ்ணராய புரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி பூமி பூஜை செய்து பணி களை துவக்கி வைத்தார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு விலை யில்லா நோட்டுகள், சீருடைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
கான்கிரீட் பலகை சேதம்
நாகப்பட்டினம், ஜூலை 27- நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் ரவுண்டானா அருகில் வேளாங் கண்ணி - நாகப்பட்டினம் இணைப்பு சாலையில் உள்ள ரயில்வே மேம்பால நடைபாதையில் கான்கிரீட் பலகை சேதமடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா நடைபெ றும் என்பதால், தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் நடந்தே வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு வருவர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு மேம்பா லத்தின் நடைபாதையை சரி செய்தால், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும், பாதசாரிகளாக செல்பவர்களுக்கு வசதியாகவும், விபத்துகளை தவிர்க்கவும் உதவும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
82 குட்கா மூட்டைகள் பறிமுதல்
அரியலூர், ஜூலை 27 - அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் சோதனைச் சாவடியில் தா.பழூர் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட னர். அப்போது கும்பகோணம் நோக்கி சென்ற மினி லாரியை மறித்து சோதனை செய்தபோது, ஓட்டுநர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்திய தில், ராஜஸ்தான் மாநிலம் சாய்ரா கிராமத்தைச் சேர்ந்த பகிரத்சிங் (24), ஓட்டவாலா கிராமத்தைச் சேர்ந்த சோப்பாராம்(22) என்பது தெரிய வந்தது. இவர்கள் கேரளாவில் இருந்து கும்பகோணத்திற்கு காஃபி கொட்டை ஏற்றி சென்றதாக கூறியுள்ளனர். ஆனால் வாகனத்தை சோதனை செய்ததில் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இருவரையும் கைது செய்து, அவர்கள் கடத்தி வந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான 82 குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
மின் கம்பிகள் திருட்டு
பொன்னமராவதி, ஜூலை 27 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேனிமலை அருகே மின் பராமரிப்பு பணிக்காக ரூ. 2 லட்சம் மதிப்பிலான 2000 மீட்டர் நீளமுள்ள மின்கம்பிகள் கிடப்பில் போடப்பட்டு மின் ஊழி யர்கள் வேலை பார்த்து வந்த னர். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் அந்த இடத்தில் போடப்பட்ட மின்கம்பியை திருடிச் சென்றனர். இதனை அறிந்த மின்துறை ஊழி யர்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத் திற்கு வந்த கொன்னையூர் உதவி மின் செயற்பொறியாளர் அம்பேத் கார் நேரில் பார்வையிட்டார். பின்பு, பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், வழக்குப் பதிவு செய்து மின் கம்பிகளை திருடியவர்களை தனிப்படை அமைத்து காவல்துறை யினர் தேடி வருகின்றனர்.