கும்பகோணம் மாநகராட்சிக்கான வார்டு மறுவரையறை இன்று பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
கும்பகோணம், டிச.26 - கும்பகோணம் மாநகராட்சிக்கான வார்டு மறுவரையறை குறித்து பொதுமக்களிடம் திங்களன்று (டிச.27) கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி வார்டு மறுவரையறை குறித்து கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (டிச.27) அன்று மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மறுவரையறை ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் ஆட்சேபனைகள், கருத்துகளை நேரடியாக தெரிவிக்கலாம். அதன் விவரங்களை மனுவாக வழங்கலாம். இதில் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய தலைவர் பழனிகுமார், மறுவரையறை ஆணைய உறுப்பினர் மற்றும் செயலர் சுந்தரவல்லி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.
உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு புதிய திட்டம் பயன்பெற தஞ்சை ஆட்சியர் அழைப்பு
தஞ்சாவூர், டிச.2 6- பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத் தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டம் 2020-21 ஆண்டு முதல் 2024-25 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் 60 சதவீத மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் இத்திட்டம் செயல் படுத்தப்படும். மத்திய அமைச்சக உணவு பதப்படுத்தும் தொழில் துறை வாயிலாக தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் இத்திட் டம் செயல்பட உள்ளது. உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்க ளுக்கான இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அடிப்படையில் ஏற்கனவே உணவு பதப்படுத் தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனம் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்றவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படும். மேலும் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை மதிப்பு கூட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறு வனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக ஒரு சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனம் தகுதியான திட்ட மதிப்பீட்டில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெற்று பயன் பெற வாய்ப்புள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும். மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகையை வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்படும். எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை மதிப்புக் கூட்டும் தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள மற்றும் புதிதாக ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகை களை பெற்று பயனடையலாம். மேலும், விபரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர், வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிச.29 மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, டிச.26 - சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம் ஞாயிறன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் ராமர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மணல் மாட்டு வண்டி ரீச்களை திறக்க வலியுறுத்தி டிச.29 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதில் சங்க செயலாளர் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.