தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி படிப்பகத்தை புனரமைக்க முடிவு
திருவாரூர், ஜன.11 - திருவாரூர் ஒன்றியம் மாவூர் கடைவீதியின் கீழ்புறம் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி நினைவு படிப்பகம் கஜா புயலின் போது கடுமையாக சேதமடைந்தது. இந்த படிப்பகத்தை மீண்டும் புனரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றியக் குழு முடிவு செய்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி பெயரில் செயல்பட்டு வந்த இந்த படிப்பகம், மாவூரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வாழ்ந்து வரும் கிராமப்புற உழைப்பாளி மக்கள் மற்றும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோரின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மையமாகவும் விளங்கியது. இப்பகுதி மக்கள் இங்கு செயல்பட்டு வந்த சிபிஎம் அலுவலகத்திற்கு நம்பிக்கையோடு வந்து தங்களின் பிரச்சனைகளைக் கூறி வந்தனர். இதனால் இப்பகுதி மக்கள் காவல்நிலையம் செல்வது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டது. இத்தகைய பெருமைக்குரிய படிப்பகம் இருந்த இடம் தற்போது தரைமட்டமாக உள்ளது. இந்த பகுதியில் பொதுப் பணித்துறையின் வெண்ணாறு வடிநில கோட்ட நீர்வள ஆதார பிரிவின் மூலமாக வெள்ளையாறு தூர்வாரப்பட்டு தரைகளை உயர்த்தி சாலையை பராமரிக்கும் பணி நடைபெற்று வந்ததால், படிப்பகத்தை புனரமைத்து கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பொதுப்பணித்துறை தனது பணியை பூர்த்தி செய்தபடியால் மீண்டும் படிப்பகத்தை ஏற்கனவே இருந்தபடி எழிலார்ந்த முறையில் கட்டுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இதுபற்றி பொதுப் பணித்துறை நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் : சிபிஎம் நிதி வசூல்
பெரம்பலூர் ஜன.11 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதிக்கான உண்டியல் நிதியளிப்பு வசூல் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் நக ரத்தில் நகர கமிட்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.கலையரசி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சிவா னந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.ரெங்கராஜ், வரத ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். வேப்பந்தட்டை வட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செய லாளர் பி.ரமேஷ் தலைமையில் வட்டச் செயலாளர் கோகுல கிருஷ்ணன், பாரதி, கோவிந்தன். சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். குன்னம் வட்டத்தில் வட்டச் செயலாளர் செல்ல முத்து, தலைமையில் முத்துசாமி, அமுதா, செல்வி, ராஜ சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலத்தூர் வட்டத்தில் மாவட்டசெயற்குழு உறுப்பினர் ரெங்கநாதன் தலைமையில் வட்டச் செயலாளர் எம்.செல்லத்துரை, மாவட்டக் குழு உறுப்பி னர் மகேஸ்வரி, பாப்பு, ராணி, மின்னரங்கம் கமிட்டியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அகஸ்டின் தலைமை யில் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய ஓஎன்ஜிசி நிறுவனம்
மன்னார்குடி, ஜன.11- திருவாரூர் அருகே சூரனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் காரைக்கால் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு தலைவர் தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தேவையான மேஜை, நாற் காலி, கணினி, பிரிண்டர், நகல் எடுக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை மாவட்ட கல்வி அலுவலர் தியாகராஜனிடம் ஓ.என்.ஜி.சி முதன்மை பொதுமேலாளர் ரவிக்குமார் வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி விஜய் கண்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலை வர் ரவி, தலைமை ஆசிரியர் வசந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிராம திறன் மேம்பாட்டு பயிற்சி
பொன்னமராவதி, ஜன.11 - பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீன் தயாள் உபாத்யா கிராம திறன் மேம்பாட்டு பயிற்சி ஊராட்சித் தலைவர்களுக்கு நடந்தது. பயிற்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் சுதாஅடைக்கல மணி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட மகளிர் உதவி திட்ட அலுவலர் அமுதா, கிராமப் புறங் களில் படித்து வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் 18 வயது முதல் 35 வரை அனைவரை யும் அரசு வழங்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் புதிய தொழில் பயிற்சி அளித்து சுயதொழில் செய்து வாழ்க்கை தரத்தினை உயர்த்த வழி ஏற்படுத்துதல். தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உரு வாக்கும் பயிற்சி மையம் உள்ள இடங்கள் குறித்தும், கிராமப் புற இளைஞர்களை இந்த பயிற்சி மையத்தில் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் விளக்கிப் பேசினார். இதில் வட்டார இயக்க மேலாளர் ஜான்சி, ஒன்றிய அலுவலக திட்ட மேலாளர் கற்புக்கரசி, ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சிஐடியு சமத்துவ பொங்கல் விழா
பெரம்பலூர், ஜன.11 - சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமையை வலி யுறுத்தி பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் விழா செவ்வாயன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித் தார். ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் மற்றும் கிளை நிர்வாகிகள், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலை வர் கலையரசி, நகராட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் பொன்ராஜ், ஆ.செல்லதுரை, செல்லமுத்து மற்றும் ஏராள மான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி திருவையாறில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஜன.11 - பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சாவூர் மாவட் டம் திருவையாறு பேரூராட்சி அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.பிரதீப் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், ஒன்றியச் செய லாளர் ஏ.ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.பழனி அய்யா, எம்.ராம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கிளைச் செயலாளர்கள் கே.விஜயகுமார், எஸ்.சுமிதா, பி.மணிகண்டன், சிஐடியு எல்.சௌந்தர்ராஜன், கே.கோவிந்தராஜ், மூத்த தோழர் டி.புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், “தொடர்ந்து அசுத்த மாக வரும் குடிநீரை சுத்தம் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜா நகர் பகுதியில் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும். அந்தணர் குறிச்சி, திருமலைகார்டன், பாலாஜிநகர், யசோதா நகர் பகுதியில், மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் அமைத்து தர வேண்டும். ஸ்ரீராம் நகரின் குறுக்கே செல்லும் பாசன வாய்க்காலில் பக்கச்சுவர் அமைத்தும், சாலை கள் சந்திக்கும் இடங்களில் வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைத்தும் தர வேண்டும். சுடுகாடு, இடுகாடு பகுதியை சுத்தம் செய்வது டன் மின்சார சுடுகாடு அமைத்து தர வேண்டும். அந்தணர் குறிச்சி ஆதி திராவிடர் (பழந்தமி ழர்) பகுதியில் தினமும் குப்பை அள்ளுவதை உறுதி செய்ய வேண்டும்” என பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கடலோரத்தில் ஒதுங்கிய கஞ்சா
வேதாரண்யம், ஜன.11- நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவு கடற்கரை பகுதியில் 18 கிலோ கஞ்சாவை வேதா ரண்யம் கடலோர காவல் படை போலீசார் கைப்பற்றி யுள்ளனர். கடலோர பகுதியில் கடலோர காவல்படை காவல் கண்கா ணிப்பாளர் குமார் தலைமையிலான ஆய்வாளர் செல்வ ராஜ் உள்ளிட்டோர் ரோந்து பணியில் இருந்த போது வேதா ரண்யம் கடற்கரையை அடுத்த மணியன் தீவு கடற்கரை பகுதியில், தலா 2 கிலோ வீதம், 9 பொட்டலங்களில் 18 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியிருப்பது தெரிய வந்தது. அதை கைப்பற்றி கடலோர காவல் படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்சோவில் ஆசிரியர் கைது
புதுக்கோட்டை, ஜன.11 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதியைச் சேர்ந்தவர் வீ.சீனியப்பா(57). இவர், மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் கணித ஆசிரிய ராக பணிபுரிந்து வருகிறார். இவர், மாணவி ஒருவருக்கு பாலி யல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில், ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
முந்திரி தோப்பில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு
அரியலூர், ஜன.11 - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிவலிங்கபுரம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் முந்திரி தோப்பில் ஆடு மேய்க்க சென்றவர்கள் துர்நாற்றம் வீசியதையும், முந்திரி மரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு இருந்ததை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன்படி, அங்கு வந்த காவல் ஆய்வாளர் குணசேக ரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று ஆண் சடலத்தை மரத்திலிருந்து இறக்கி விசாரணை மேற் கொண்டனர். அதில் தூக்கில் தொங்கியவருக்கு 40 வய துக்கு மேல் இருக்குமெனவும், அவர் அணிந்திருந்த வேட்டி யால் மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையிலும், முகக் கவசம் அணிந்த நிலையிலும் இருந்துள்ளார். இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எதற்காக இங்கு வந்தார், எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.
காவலர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்
அரியலூர், ஜன.11- தமிழக அரசு முன்களப் பணியாளர்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவித் துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை யில் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கலை கதிரவன் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டதுடன், அனைத்து போலீசார்க ளும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக் டர் சுமதி, ஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் சுபா, மரு.மதியழகன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்ட னர்.
போலீசார் இலவச முகக்கவசம் வழங்கல்
கும்பகோணம், ஜன.11 - தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை பரவி வருவதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாச்சியார்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் ரேகா ராணி தலைமையில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் ரவி, காவலர்கள், சுகா தார ஆய்வாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்ப டுத்தி இலவசமாக முகக்கவசங்களை வழங்கினர்.
திருவரங்குளம் ஒன்றியத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை, ஜன.11 - புதுக்கோட்டை மாவட் டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல்துறை அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமைறு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசு கையில், கைக்குறிச்சியில் 596 குடும்ப அட்டைதாரர்களுக்கும், வாண்டாக்கோட்டையில் 325 குடும்ப அட்டைதாரர்க ளுக்கும் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. திரு வரங்குளம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் சுகா தாரப் பணியாளர்கள், முன் களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர் களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. அரையப்பட்டியில் வேளாண்மைத் துறையின் சார்பில் 80 விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் (ரூ.3.02 லட்சம் மானியம்) உளுந்து பயிர் சாகுபடி இடுபொ ருட்கள், ரோட்டவேட்டர், நேரடி நெல் விதைக்கும் கருவி, தென்னை மரம் ஏறும் கருவி, தார்பாய், மரக் கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கீரமங்கலத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் தமிழ்நாடு தரிசுநில மேம்பாட்டு இயக்கம் 2020-21-ன் கீழ் அமைக்கப்பட்ட மதிப்புக் கூட்டு மையத்தின் நக்கீரர் கூட்டுப்பண்ணை நிறுவனத்திற்கு மானிய விலையில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் (ரூ.10 லட்சம் மானியம்) அமைக்கப்பட்ட மதிப்புக்கூட்டு இயந்திரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சிகளில், மவாட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை தொ குதி எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வேளாண் இணை இயக்கு நர் இராம.சிவக்குமார் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உரிய விதிகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி
புதுக்கோட்டை, ஜன.11 - உரிய விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த சம்மந் தப்பட்ட அலுவலர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவுறுத்தி உள்ளார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவது தொ டர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அவர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக் கட்டு விழா நடத்துவதற்கு 2021 ஆம் ஆண்டில் 120 கிராமங்கள் அரசிதழில் சேர்க்கப்பட்டு உள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி இதுவரையில் 8 விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன. அரசித ழில் பதிவு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அறிவுறுத்தப்பட் டுள்ளது. விதிமீறல்கள் இன்றி நடத்தப்படு வதை கண்காணிக்க கோட்ட அளவில் குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக கால்நடை பராமரிப்புத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட் சித் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளை உள்ளடக்கிய ஜல்லிக் கட்டு விழா குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நிலையான வழி காட்டு நெறிமுறைகளையும் உரிய முறை யில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப் பாளர் நிஷா பார்த்திபன், முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளர் (பொது) து.தங்கவேல், கால்நடை த்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சம்பத், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
சிபிஎம் போராட்ட அறிவிப்பு வெற்றி பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்: அதிகாரிகள் உறுதி
தஞ்சாவூர், ஜன. 11 - தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் வளம்பக்குடி, மனையேறிப்பட்டி, புதுக்குடி ஆகிய கிராமங்களில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், பேருந்துகள் நின்று பயணி களை ஏற்றிச் செல்லாததைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் ஜன.11 (செவ்வாய்க்கி ழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், பூதலூர் வட்ட அலுவலகத் தில், வட்டாட்சியர் பிரேமா தலைமையில், அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் ஜன.10 திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத் தில், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலா ளர் சி.பாஸ்கர், புதுக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் அன்பரசி மற்றும் 8 பேர் கலந்து கொண்டனர். மேலும், துறை சார்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தஞ்சா வூர் கோட்ட மேலாளர், துணை மேலாளர், காவல்துறை சார்பாக செங்கிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா, வருவாய் ஆய்வாளர் ஆகி யோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைதி கூட்டத் தில் கலந்து கொண்டவர்கள், புதுக்குடி, வளப் பக்குடி மனையேறிப்பட்டி கிராமங்களில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்றும், பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிற்கும் இடங்கள் குறிப்பிடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேற்குறிப்பிட்ட கிராமங்களில் பேருந்து கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் எண் மற்றும் பேருந்துகளில் கிராமங்களின் பெயர் குறிப்பி டப்படும் என போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் உறுதியளித்தார். எனவே, செவ் வாய்க்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.