districts

திருச்சி முக்கிய செய்திகள்

தில்லி, இலங்கைக்கு  விமான சேவை ரத்து

திருச்சிராப்பள்ளி, ஜன.17- திருச்சி விமான நிலையத்திலிருந்து புதுதில்லி மற்றும் இலங்கைக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் விமான சேவை கடந்த  ஜன.10 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் கொ ரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக பயணி களிடையே இந்த விமான சேவைக்கு போதுமான வரவேற்பு  இல்லாத காரணத்தினால் தற்காலிகமாக இந்த சேவை ஞாயிற் றுக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப் படுவதாக அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவி வழங்கல்

பாபநாசம், ஜன.17 - பாபநாசம் காப்பன் தெருவைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துரைமுருகன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, துரைமுருகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சு. கல்யாணசுந்தரம், பொதுமக்கள் 300 பேருக்கு புடவை, வேட்டி, சட்டை பிட், ரூ.1000 ரொக்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவி களை வழங்கினார். பின்னர் பல்வேறு விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை  வழங்கினார். 

3 மணி நேரத்தில்  வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்த சோழபுரம் காவல்துறை

கும்பகோணம், ஜன.17 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழ புரம், ராமானுஜபுரம், பெரியார் நகரைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன், அதே பகுதியை சேர்ந்த கவியரசு ஆகிய இருவ ரும் சோழபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்த அடிதடி வழக்கில் சிறையில் இருந்தனர்.  தற்போது ஜாமீனில் வந்தவுடன் அந்த ஓட்டல் உரிமை யாளரின் வீட்டுக்குச் சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி அவர்க ளிடம் இருந்து ரூ.50 ஆயிரம், அரை கிராம் தங்க நகை, 2  செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர். தகவல் கிடைத்து  விரைந்து சென்ற சோழபுரம் காவல்துறையினர் சம்பவம் தொ டர்பாக திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் துணை கண்கா ணிப்பாளர் வெற்றிவேந்தனுக்கு தகவல் தெரிவித்தனர்.  அவரது உத்தரவின் பேரில், திருப்பனந்தாள் காவல்துறை  ஆய்வாளர் முத்துக்குமார், சோழபுரம் காவல் நிலைய உதவி  காவல் ஆய்வாளர் அமல்தாஸ் தலைமையிலான காவலர்கள்,  சோழபுரம் மற்றும் வளந்தகண்டம் பகுதியில் உள்ள சிசிடிவி  கேமராக்களை ஆய்வு செய்து சம்பவம் நடந்த மூன்று மணி  நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.39 ஆயிரம் பணம், அரை கிராம் தங்க நகை, 2 செல்போன்கள், 2 கத்திகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.65 லட்சம் திருட்டு

தஞ்சாவூர், ஜன.17 - தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு இ.பி. காலனியை சேர்ந்த வர் செல்வம்(37). இவர் கடந்த 15 ஆம் தேதி தனது மகள் காது  குத்து விழா அழைப்பிதழ்களை உறவினர்களிடம் வழங்குவ தற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டது கண்டு  அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற போது பீரோ உடைக்கப் பட்டு, அதில் இருந்த ரூ.1.25 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி  விளக்கு, விலை உயர்ந்த கடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள்  திருடிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு  ரூ.2.65 லட்சம். இதுகுறித்து செல்வம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வா ளர் பார்த்திபன் தலைமையில், காவல்துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேன் மோதி ஒருவர் பலி

தஞ்சாவூர், ஜன.17 -  தஞ்சை வெண்ணாற்றங்கரை சுங்கான் திடல் பெரிய தெருவை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மதன்ராஜ் (29). சம்ப வத்தன்று இவர் வீட்டின் அருகே உள்ள சாலையைக் கடக்க  முயன்றபோது அந்த வழியாக பால் ஏற்றி வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக மதன்ராஜ் மீது மோதியது. இதில் தூக்கி  வீசப்பட்ட மதன்ராஜ் பலத்த காயமடைந்தார். உடனே  அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி மதன்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு  காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

தேங்காய் உடைக்கும் போட்டி

தஞ்சாவூர், ஜன.17 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் பல்வேறு கிராமங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு  விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் மாட்டுப்  பொங்கலை முன்னிட்டு தேங்காய் உருட்டும் நிகழ்ச்சி நடை பெற்றது. அதாவது எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள்  கைகளில் தேங்காயை வைத்து உருட்டி அதனை நேருக்கு  நேர் மோத விடுவார்கள். அந்த மோதலில் உடைந்த தேங்காயை உடைத்தவர் எடுத்துக் கொள்வார். போர்க்காய் எனப்படும் இந்த மோதல் தேங்காயை ரூ.200 முதல் 500 வரை  விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

பேராவூரணி எம்எல்ஏ  அசோக்குமாருக்கு கொரோனா

தஞ்சாவூர், ஜன.17 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி திமுக எம்எல்ஏ என்.அசோக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. கடந்த  சில நாட்களாக இருமல்,  தொண்டை கரகரப்பு இருந் துள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர் இரு தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை, செய்துள்ளார்.  இதில், ஞாயிறன்று மாலை அவருக்கு கொ ரோனா தொற்று உறுதியா னது. இதையடுத்து அவர்  வீட்டில் தன்னை தனிமைப்ப டுத்திக் கொண்டதோடு மருத்துவர்கள் ஆலோ சனைப்படி மருந்துகளை உட்கொண்டு வருகிறார். கடந்த இரண்டு தினங்களாக தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தங்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.  கொரோனா காரண மாக வீட்டில் தன்னை தனிம ைப்படுத்தி கொண்டிருப்ப தாக தனது முகநூல் பக்கத் தில் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், திங்கள்கி ழமை பேராவூரணியில் ஏழை  மக்கள் 60 பேருக்கு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில்  அவர் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழக மீனவர்களை விடுதலை  செய்ய  நடவடிக்கை எடுத்திடுக!  - நவாஸ்கனி எம்.பி., வலியுறுத்தல்

இராமநாதபுரம், ஜன.17- இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர் களை விரைந்து விடுதலை செய்ய ஒன்றிய அரசு  உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்  என இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  நவாஸ்கனி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நவாஸ்கனி எம்.பி. வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.அவர்கள் விரைவாக விடுதலை செய்யப் பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வரு  கிறது. இந்நிலையில் மீனவர்களின் சிறைக்கா வல் நீட்டிக்கப்படுவது பெரும் ஏமாற்றம் அளிக் கிறது. தமிழக மீனவர்கள் உடனடியாக விடு தலை செய்யப்பட வேண்டும் என தமிழக  முதல்வரிடம் வலியுறுத்தியதை அடுத்து, தமி ழக மீனவர்களை விரைவாக விடுதலை செய்ய இலங்கை அரசிற்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள் ளது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், விரைந்து நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய வெளியுறவுத் துறை  அமைச்சகம் துரிதமாக மேற் கொள்ள வேண் டும்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அதிக கட்டணம் வசூல் வாகன காப்பக குத்தகைதாரர் மீது புகார்

சிவகங்கை, ஜன.17- சிவகங்கை மாவட்டம் நகர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள வாகன காப்பக குத்தகைதாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக நகர் செயலாளர் துரை ஆனந்த் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், சிவகங்கை நகர் பேருந்து  நிலையம் எதிரில் சைக்கிள், பைக் நிறுத்தும் வாகன காப்பகம் உள்ளது. இதில் குத்தகை எடுத்த வர் நகராட்சி நிர்ணய கட்டணத்தை பெறாமல்,  விதியை மீறி 4 மடங்கு அதிகமாக வசூலித்து வரு கின்றார். இதனை நகராட்சி நிர்வாகத்திட மும் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித  நடவடிக்கைகள் இல்லை. எனவே, மாவட்ட  ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை  எடுக்க வேண்டும். நிர்ணயித்த தொகை எவ்வ ளவு என ஒரு பலகை வைக்க வேண்டும் என கூறி யுள்ளார்.

அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால் புகார் அளிக்கலாம்: ஆட்சியர்

தஞ்சாவூர், ஜன.17-  தனியார் அறுவடை இயந்திரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதல் வாடகை கேட்டால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையினை முறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஜன.6 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2350, டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1700 என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து அறுவடை இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தி விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வாடகையினை விட கூடுதலாக விவசாயிகளிடமிருந்து வாடகை வசூல் செய்தால், மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், தஞ்சாவூர், செயற்பொறியாளர் (வே.பொ) எண்.90035 23343, தஞ்சாவூர், உதவி செயற்பொறியாளர் (வே.பொ) எண். 90805 52519, கும்பகோணம் உதவி செயற்பொறியாளர்(வே.பொ) எண். 94436 78621, பட்டுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் (வே.பொ) எண். 99761 93110 மற்றும் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எண். 94420 93161, தஞ்சாவூர், மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 94875 96121, கும்பகோணம், மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 93848 08368, பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் எண்.93848 08335 என்ற எண்களில் புகார் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது மேலும், தங்கள் புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக மேற்காணும் அலுவலர்களுக்கோ அல்லது ‘தஞ்சை விவசாயி குறைதீர்ப்பு’ என்ற வாட்ஸ் ஆப் குரூப் மூலமாகவோ பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவசாயிகள் தங்களுடைய புகார் மனுக்களை நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அளித்திடலாம்” என தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்கல்

தஞ்சாவூர், ஜன.17 - தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி வட்டம் ஆதனூர் பகுதியில் நிலமற்ற ஏழைகள் 68 பேருக்கு மனைப்பட்டா வழங்கப்பட்டது.  பேராவூரணி புதிய பேருந்து நிலையம், செக்கடித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நில மற்ற ஏழை மக்கள், தங்களுக்கு மனைப்பட்டா கேட்டு, முதலமைச்சர் குறைதீர்க்கும் முகாமில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தனர்.  மேலும் பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் என்.அசோக்குமா ரிடமும் மனு அளித்தனர். அவ்வாறு  அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப் பட்டு, திங்கட்கிழமை 68 பேருக்கு தலா 2 செண்ட் இடம் இலவசமாக வழங்கப்பட்டது. பூக்கொல்லை - ரெட்டவயல் சாலையில், வளம்மீட்பு பூங்கா அருகே, திருவள்ளுவர்புரம் என பெயரிடப்பட்ட அந்த இடத்தை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட் சியர் பிரபாகரன் திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில், வட்டாட்சியர் சுகுமார், சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர்கள் அப்துல் மஜீத், ஆனந்தராஜ், பேராவூரணி பேரூ ராட்சி செயல் அலுவலர் பா.பழனி வேல், துப்புரவு ஆய்வாளர் அன்பர சன், துணை வட்டாட்சியர்கள், வரு வாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக  அலுவலர்கள், நில அளவையர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பய னாளிகள் கலந்து கொண்டனர்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி, ஜன. 17 - வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.12.2021 அன்றைய  தேதியில் 5 வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பிளஸ் 2, பட்டப்ப டிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடைய வர் ஆவர். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 31.12.2021 அன்றைய தேதி யில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடைய வர் ஆவர்.  ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக் குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை. அரசின் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களாயின், அவர்களுக்கு  வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை.  பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது.   மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி,கல்லூரி  மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகிய வற்றுடன் நேரில் வந்து, விண்ணப்பப் படிவத்தை திருச்சிராப் பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டுதல் மையத்தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம். அலுவ லகத்திற்கு வரும் பதிவுதாரர்கள் முகக்கவசம் அணிந்து வரு வது மிகவும் அவசியம். ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித் தொகை பெற்றவர் மற்றும் பொறியியல் மருத்துவம், விவசா யம் மற்றும் சட்டம் போன்ற தொழிற்கல்வி, பட்டப் படிப்புகள்  முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற  தகுதியில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரி வித்துள்ளார். 

இறந்த ராணுவ வீரரின் உடல் முழு மரியாதையுடன் அடக்கம்

தேனி, ஜன.17- இமாச்சல பிரதேசத்தில்  இறந்த ராணுவவீரர் உடல் வருசநாடு அருகே  முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே கோவில் பாறையை சேர்ந்தவர் முத்தையா (31). இவருடைய மனைவி ஆறுமுக வள்ளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முத்தையா  கடந்த 2017ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து தற்போது இமாச்சல பிரதேசத்தில் இந்தோ திபெத் காவல்படை பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வெள்ளியன்று பணியில் இருந்த போது முத்தை யாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முத்தையா அங்கு உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி முத்தையா இறந்து போனார். அவரது சொந்த கிராமமான தேனி மாவட்டம், கோவில்பா றைக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் அரசு மரியாதை யுடன் 6 குண்டுகள் முழங்க முத்தையாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.