புதுக்கோட்டை, அக்.7- வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அண்மையில் மறைந்தார். இதையொட்டி அவருக்கு புதுக்கோட்டையில் சனிக் கிழமை புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் எம். எஸ்.சுவாமிநாதன். 94 வய தான அவர், கடந்த அக்.28 அன்று சென்னையில் கால மானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் எம். எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும், தமிழ் நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் புகழஞ்சலி நிகழ்ச்சியை நடத்தின. இந்நிகழ்ச்சிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறு வனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், முன் னாள் முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி, காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பேராசிரியர் நாராயண மூர்த்தி, அரிமளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மு.மேகலா, மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் செந்தாமரை பாலு, அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எம்.வீரமுத்து, செயலாளர் மு. முத்துக்குமார், முன்னோடி விவசாயிகள் ஜி.எஸ்.தன பதி, காமராஜ் உள்ளிட்டோர் புகழஞ்சலி உரையாற்றினர்.