districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு பயணக் கட்டணச் சலுகை படிவம் வழங்க ஏற்பாடு

தஞ்சாவூர், மே 27-  

     பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்து, ரயில் பயணக் கட்டணச் சலுகை படிவம், மருத்துவர் கையெழுத்திட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் மற்றும் ஒன்றிய அரசின் ரயில்களில் பயணம் செய்ய மாற்றுத் திறனாளி களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

   மாற்றுத் திறனாளிகள் பாதுகாவலர்களும் கட்டணச் சலு கையில் பயணிக்கலாம். இதற்காக மருத்துவர்கள் உரிய விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு வழங்கி னால் மட்டுமே இந்த கட்டணச் சலுகை பெற முடியும் நிலை உள்ளது. இந்த விண்ணப்பம் ஆண்டுக்கொரு முறை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை,  மதுக்கூர், சேதுபாவாசத்திரம் பகுதி மாற்றுத்திறனாளி கள் இந்த சான்றிதழை பெறுவதற்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஒவ்வொரு வாரமும்  புதன்கிழமை அன்று செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் மாற்றுத்திறனாளிகள், அவர்கள் உறவினர்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.  

   இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ஏ. மேனகா தலைமையில், மாவட்ட துணைச் செயலா ளர் சி.ஏ.சந்திரபிரகாஷ், மதுக்கூர் ஒன்றியத் தலைவர் பால சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஒன்றியப் பொறுப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பட்டுக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று தலைமை மருத்துவர் அன்பழகன் மற்றும் முட நீக்கியல் துறை மருத்துவர் கலைச்செல்வன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.  

     இந்நிலையில், அங்கு ஆய்வு பணிக்காக வந்திருந்த சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் திலகம், மாற்றுத் திறனாளிகளின் கோரிக் கைகளை கேட்டறிந்து, பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையிலேயே ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை  காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாற்றுத்  திறனாளிகளுக்கான, பேருந்து, ரயில் பயணக் கட்டணச் சலுகை விண்ணப்பத்தை பரிசீலித்து கையெழுத் திட்டு வழங்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

     மேலும் அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பயண  கட்டண சலுகைக்கான கையெழுத்திடப்பட்ட படிவத்தை யும், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வழங்கி னார்.  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின், முயற்சி காரணமாக பேராவூரணி, பட்டுக்கோட்டை  பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கும்ப கோணம் பயணக் கட்டணச் சலுகை பரிந்துரை கடிதம்  பெற அலைந்து திரிவது தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.