districts

img

திருநங்கை தொழில் முனைவோர் மேம்பாட்டுக் குழு தொடக்க விழா

திருச்சிராப்பள்ளி, பிப்.24- திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள திருச்சி வேளாண் வணிக மேம்பாட்டு மையத்தில் திருநங்கைகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு குழு துவக்க விழா வியாழனன்று நடை பெற்றது. விழாவிற்கு திருச்சி அன்பில் தர்ம லிங்கம் வேளாண்மைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் மாசிலாமணி தலைமை வகித்து துவக்க உரையாற்றி னார். அப்போது அவர் கூறுகையில், ‘‘சுயமாக தொழில் புரிந்து, சாதிக்க வேண்டும் என்ற துடிப்புள்ள திரு நங்கைகளுக்கு வேண்டிய வழிகாட்டுத லும், சாதிப்பதற்கான ஆலோசனை களையும் ஆக்கப்பூர்வமாக வழங் கப்படும்’’ என்றார். முதன்மை செயல் அதிகாரி சந்தோஷ் பேசுகையில், ‘‘சுயதொழில் முனைவோராக ஆகவேண்டும் என்ற விருப்பமுள்ள திருநங்கைகளுக்கு தேவையறிந்து என்னென்ன சேவை தேவையோ அவைகளை பூர்த்தி செய்து அவர்களை வெற்றி பெரும் தொழில் முனைவோராக ஆக்கப்படும்’’ என்றார். இவ்விழாவில் வணிக மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனை வர். செந்தில்குமார், சி.ஓ.ஆர்.ஒ.ஏ.டி நிர்வாக அறங்காவலர் பத்மாவதி வசந்தன், வணிக மேம்பாட்டு மைய மேலாளர் சரவணன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். முதன்மை செயல் அதிகாரி சந்தோஷ் நன்றி கூறினார். இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருநங்கை கள் பலர் கலந்து கொண்டனர்.