districts

img

சுற்றுலா தலத்தை மேம்படுத்த திட்டம் தரங்கம்பாடியில் படகு இல்லம்?

மயிலாடுதுறை, ஏப்.5 - மயிலாடுதுறை மாவட்ட சுற்றுலாத் தலங்களை மேம்  படுத்தும் நோக்கில் சுற்று லாத் துறையினர் தரங்கம் பாடியில் ஆய்வு செய்தனர். தரங்கம்பாடி டேனிஷ்  கோட்டை, கடற்கரை கவர் னர் மாளிகை, தமிழ்நாடு சுற்  றுலா துறைக்கு சொந்த மான தங்கும் விடுதி ஆகி யவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தரங்கம் பாடியில் படகு இல்லம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்தும், தமிழ் நாடு சுற்றுலா துறை வளர்ச்சிக்  கழக மேலாளர் தினேஷ்,  சுற்றுலாத்துறை அலுவலர்  அரவிந்த்குமார் உள்ளிட்ட  அதிகாரிகள் ஆய்வு செய்த னர். ரூ.4.17 கோடி அளவில் தரங்கம்பாடி சுற்றுலாத் தளத்தை மேம்படுத்த அர சுக்கு கருத்துரு சமர்ப்பிக்  கப்பட்டுள்ளது. அதன்படி  இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. ஆய்வின் போது பேரூ ராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி, பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், தொல்லியல் துறை அலு வலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுல்தான், சகாயராஜ் ஆகியோர் உட னிருந்தனர்.