தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “தஞ்சாவூர் மாவட் டத்திற்குட்பட்ட எட்டு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2308 வாக்குச் சாவடிகள் உள்ளன. அதில் 114 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறை களை 24 மணி நேரமும் கண்காணிப் பதற்கென 72 பறக்கும் படை குழுக்க ளும், 24 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 8 வீடியோ கண்கா ணிப்பு குழுக்கள் சுழற்சி முறையில் ஈடு படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்து ஆன்-லைன் மூலமாக புகாரினை பெறுவதற்கு ’சி-விஜில்’ என்ற ஆப் செயல்படும் விதம் குறித்தும், அரசியல் கட்சி கள் மற்றும் வேட்பாளர்கள் வாகன மற்றும் கூட்ட அனுமதி பெறுவதற்குரிய ‘சுவிதா’ ஆப் குறித்த செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான புகார்களை கட்ட ணமில்லா தொலைபேசி எண். 18004259464 மற்றும் 1950 மூலமாக பொதுமக்களிடமிருந்து பெறுவதற்கு மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டு 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சுழற்சி முறையில் பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.