districts

தஞ்சாவூரில் நாளை கால்நடை வளர்ப்புப் பயிற்சி

தஞ்சாவூர், மே.7 -  

   தஞ்சாவூரில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

   தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில், தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வரு கிறது.  இங்கு, கால்நடை வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.  

   மே 9-ஆம் தேதி வெள்ளாடு வளர்ப்பு, 16-ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு,  23-ஆம் தேதி  கறவை மாடு வளர்ப்பு குறித்து காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சியளிக்கப்படுகிறது.

   விருப்பமுள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற முன்பதிவு அவசியம் இல்லை. பயிற்சியில் பங்கு பெறு பவர்கள் ஆதார் அட்டை நகலுடன் வரவேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.