districts

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு: திருச்சியில் 50 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

திருச்சிராப்பள்ளி, மே 20 - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2-ல் அடங்கிய பல்வேறு பதவிக்கான போட்டி தேர்வு மே 21 (சனிக்கிழமை) நடைபெறுகிறது.  திருச்சி மாவட்டத்தில் இத்தேர்வை திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி மற்றும் மணப்பாறை ஆகிய வட்டங்களில் 160 தேர்வு மையங்களில் 50,019 நபர்கள் எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென 160 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் ஆய்வுக்காக துணை ஆட்சியர் நிலையில் 15 பறக்கும் படை அலுவலர்களும், தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் 192 ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை பதிவு செய்ய வீடியோ கிராபர்கள், தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் என்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்போன் உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களையும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

;