தஞ்சாவூர், ஏப்.19-
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தரத் தேர்வுக் கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற வுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் கூறுகையில், ‘‘பணியாளர் தேர்வு வாரி யத்தின் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தரத் தேர்வுக்கு மே 3-ஆம் தேதிக்குள் http: //ssc.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்ட வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் தன்னார்வப் பயிலும் வட்டத் தின் மூலம் இத்தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வியா ழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் தேர்வுக்கு விண் ணப்பிக்கும் முறை, தேர்வுக் கான பாடத் திட்டம், தேர்வுக்கு தயார் செய்யும் விதம், பாடக் குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு ஆகியவை நடைபெறும்.
எனவே, போட்டித் தேர்வுக்கு தயாராகும் தஞ்சா வூர் மாவட்ட இளைஞர்கள் தங்களது பெயர், கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு 81109-19990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தகவல் அனுப்பி பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04362 237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.