districts

பூலாங்குடி காலனி மக்களுக்கு சாலை, குடிநீர் வசதி செய்து தருக! சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி,  மே 11 - திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் தாலுகா பூலாங் குடி காலனியில் அடிப்படை வசதிகளை செய்து தராத  பழங்கனாங்குடி பஞ்சா யத்து நிர்வாகத்தை கண்டித் தும். பூலாங்குடி காலனி 1வது, 2வது வார்டுகள் மற்றும்  பாரத் நகர் பகுதியில் நீண்ட  காலமாக சீரமைக்கப்படா மல் உள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைத்து புதிய தார்ச்சாலைகளாக அமைக்க  வேண்டும். சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு புதிய சாலைகள் அமைத்து தர வேண்டும். பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க வேண்டும். மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை வசதி அமைத்துத் தர வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை உடனே மாற்ற வேண்டும். தெருவிளக்கு இல்லாத பகுதிகளுக்கு தெரு விளக்கு அமைத்து தர  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாரத்  நகர் கிளை சார்பில் பூலாங் குடி காலனி பேருந்து நிலை யம் அருகில் செவ்வாய்க் கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு பாரத் நகர் கிளை செயலாளர் ராணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சிவராஜ், தாலுகா செய லாளர் மல்லிகா, மாவட்ட குழு உறுப்பினர்கள் தெய்வ நீதி, முருகேசன் ஆகியோர் பேசினர்.

;