திருச்சிராப்பள்ளி, ஆக.24-
பொது விநியோகத்திட் டத்தைப் பலப்படுத்த வலி யுறுத்தி திருச்சிராப்பள்ளி யில், ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பொது விநியோகத்தை பலப்படுத்த வேண்டும், காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண் டும், கழக பணியாளர்களுக் கும், அரசு ஊழியர்களுக்கு இணையான பென்ஷன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி திருச்சிராப்பள்ள மண்டல மேலாளர் அலுவலக வளா கத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மண் டலச் செயலாளர் தீனதயா ளன் தலைமை வகித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பொதுத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் புவ னேஸ்வரன், மாநிலச் செய லாளர் ராசப்பன், துரைமுரு கன், ஐயப்பன், சண்முக வேல், வடிவேலன், தினேஷ் குமார், டி.ஐயப்பன், சின் னய்யா, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவகுமார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டப் பொருளாளர் பழனி யாண்டி உள்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.