districts

img

கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையிலான போராட்ட அறிவிப்பு வெற்றி

புதுக்கோட்டை, ஜூன் 14-

      கறம்பக்குடி அரசு மருத்  துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலி யர்கள் நியமிக்கப்பட்ட தோடு விஷமுறிவு மருந்து  மாத்திரைகளும் வரவழைக் கப்பட்டுள்ளன. இது எம்.சின்னதுரை எம்எல்ஏ தலை மையிலான போராட்ட அறி விப்புக்கு கிடைத்த வெற்றி யாகும்.

   புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு தாலுகா மருத்துமனையில் போதிய மருத்துவர்கள் மற்  றும் பணியாளர்கள், மருந்  துப் பொருட்கள் இருப்ப தில்லையென அப்பகுதி மக்  கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தாலுகா வின் தலைநகர் பகுதியில்  உள்ள அரசு மருத்துவமனை ஏதோ அரசு ஆரம்ப சுகா தார நிலையம் போல செயல் படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பல கட்ட முயற்சி எடுத்தும் கோரிக் கைகள் நிறைவேற்றப்பட வில்லை.

    இதனால், கறம்பக்குடி அரசு தாலுகா மருத்துவ மனையை 24 மணி நேரமும் மருத்துவர்களோடு செயல் படும் மருத்துவமனையாக தரம் உயரத்த வேண்டும். போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியா ளர்கள் நியமிக்க வேண்டும். விஷ முறிவு மருந்து உட்பட அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் போதிய அள வில் இருப்பு வைக்க வேண்  டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் எம்.சின்னதுரை தலை மையில் அனைத்துக் கட்சி யினர் சார்பில் கடந்த 07.06. 2023 அன்று போராட்டம் நடத்  தப் போவதாக அறிவிக்கப் பட்டது.

     இதனைத் தொடர்ந்து கடந்த 06.06.2023 அன்று  கோட்டாட்சியர் முருகேசன்  தலைமையில் கறம்பக்குடி  வட்டாட்சியர் அலுவல கத்தில் சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் 13.06.2023-க்குள் 5 மருத்து வர்களைக் கொண்டு 24 மணிநேரமும் செயல் படுத்துவது, கூடுதலாக செவிலியர்களை நிய மிப்பது, போதிய மருந்து களை இருப்பு வைப்பது என  அதிகாரிகள் தரப்பில் உறுதி யளிக்கப்பட்டது.

   இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் கறம்பக்குடி பேரூராட்சித் தலைவர் உ.முருகேசன், காங்கிரஸ் வட்டாரத் தலை வர் ஞானசேகரன், பேரூ ராட்சி மன்ற உறுப்பினர்கள் நியாஸ், சின்னத்தம்பி, வர்த்  தக சங்கத் தலைவர் ஜெகன்  நாதன், சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலாளர் பி.வீரமுத்து, மஜக மாவட்டச் செயலா ளர் முகமதுஜான் உள் ளிட்டோர் புதனன்று மருத்து வமனைக்கு சென்று ஆய்வு  மேற்கொண்டனர். அப்போது கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் ராமசாமி, மருத்துவ அலு வலர் மகேஸ்வரி உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

    ஏற்கனவே இருந்த 3 மருத்துவர்களில் 2 பேர் விடு முறையில் சென்று இருந்த னர். விடுமுறையில் இருந்த  ஒருவர் மீண்டும் பணிக்கு வந்துவிட்டார். கூடுதலாக 2 மருத்துவர்கள் நியமிக் கப்பட்டிருந்தனர். தற்பொ ழுது அங்கு 4 பேர் பணி யில் உள்ளனர். விடுப்பில் உள்ள ஒருவர் விரைவில் வந்துவிடுவார் என்று தெரி விக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள 4 செவிலியர்களுடன் கூடுதலாக 2 பேர் நியமிக் கப்பட்டு மொத்தம் 6 செவி லியர்கள் பணியமர்த்தப் பட்டனர். நாய்க்கடி, பாம்புக்  கடி ஊதிய மற்றும் மருந்து  மாத்திரைகளை போதிய  அளவு இருப்பு வைக்கப்  பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டது. மேலும், மருத்துவ மனை வளாகத்தில் மண்டிக்  கிடந்த புதர்கள் அகற்றப் பட்டு தூய்மைப்படுத்தப் பட்டிருந்தது.

   மருத்துவமனை வளா கத்தை முழுமையாக ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னதுரை மருத்து வமனைக்கு வரும் நோயாளி களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்  துவர்கள் மற்றும் பணியா ளர்களுக்கு அறிவுறுத்தி னார்.