திருச்சிராப்பள்ளி, ஆக.24-
சென்னையிலிருந்து விமான மூலம் வியாழனன்று முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் திருச்சிராப்பள்ளி வந்த டைந்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவ்வப்போது வெளி மாவட்டங்களுக்கு அரசு முறை பயணங்களை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களுக்குச் சென்று வந்தார். அங்கு நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புதிய திட்டங் களைத் தொடங்கி வைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவி களையும் வழங்கினார்.
இந்த நிலையில் நான்கு நாள் பயணமாக திருவா ரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற் கொள்ள உள்ளார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள் கிறார்
இந்த நிலையில் மேற் கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை யிலிருந்து விமான மூலம் வியாழக்கிழமை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி வந்தடைந் தார். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்நேரு, பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன் பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் அவருக்குச் சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை திரு வாரூர் மாவட்டம் திருக்குவ ளையில் கலைஞர் படித்த பள்ளியில் நாளை தொடங்கி வைத்து தமிழ்நாடு முழுவ தும் விரிவுபடுத்தி வைக்கி றார் முதல்வர் மு.க.ஸ்டா லின்.