தேனி, ஏப்.27-
வீரபாண்டி மாரியம்மன் கோயிலில் தங்கிய தம்பதி யிடம் நகை, பணம் கொள்ளை போனது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேனி மாவட்டம், தேவாரம் காவல்நிலையம் நிலையம் அருகே காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது40). இவரது மனைவி மாலதி. இவர்கள் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகின்ற னர். சம்பவத்தன்று வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்தனர். அப்போது நடை அடைக்கப் பட்டதால் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் வழிபாடு செய்யலாம் என முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் மாவிளக்கு எடுக்கும் இடத்தில் தூங்கிவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தனர். அப்போது தங்கள் பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, செல்போன், ரொக்க பணம் ரூ.6800 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 72 ஆயி ரத்து 800 ஆகும்.
இதுகுறித்து வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கண்காணிப்பு கேமிரா க்களை ஆராய்ந்து, திருடர்களை தேடி வருகின்றனர்.