districts

img

சிறப்பு கிரிக்கெட் போட்டி திருவாரூர் ஓஜா பாய்ஸ் அணி முதலிடம்

திருவாரூர், ஜன.18 - தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி  ஸ்டாலின் 47 ஆவது பிறந்த நாளையொட்டி,  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதி  திமுக இளைஞரணி சார்பாக மாபெரும் கிரிக்கெட் பொங்கல் திருவிழா நடைபெற்றது.  ஜன.15,16,17 ஆகிய நாட்களில் குடவாசல்  அருகே உள்ள மூலங்குடி விளையாட்டு மைதானத்தில் நடந்த சிறப்பு கிரிக்கெட் போட்டியில் திருவாரூர், நன்னிலம், குட வாசல் மற்றும் நாகப்பட்டினம், கும்பகோ ணம், நாச்சியார்கோவில் பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர். விளையாட்டு போட்டியில் 24 அணிகள் போட்டியிட்டன. இதில் முறையாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது. விழாவிற்கு நிகழ்ச்சியின் ஒருங்கி ணைப்பாளரும், திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் குடவாசல் பி.தாகீர்அலி வரவேற்றார். திமுக ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.ஜோதிராமன், பா.பிர பாகரன் மற்றும் நகரச் செயலாளர் ஏ.கே.டி.  சேரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி  கே.கலைவாணன், முதல் பரிசு பெற்ற திருவாரூர் ஓஜா பாய்ஸ் அணிக்கும், 2 ஆம்  பரிசு பெற்ற குடவாசல் ரைசிங் ஸ்டார் அணி யினருக்கும், 3 ஆம் பரிசு பெற்ற மஞ்சக்குடி ஏபிஜெ அணியினருக்கும், 4 ஆம்  பரிசு பெற்ற ஒகை ஓசிசி அணி வீரர்களுக் கும் பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக தலைமை பொதுக் குழு உறுப்பினர் ஆர்.முருகேசன் மற்றும் குட வாசல், வலங்கைமான், கொரடச்சேரி, நன்னி லம் பகுதியைச் சேர்ந்த ஒன்றிய, நகர கழக செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.