districts

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்ட பேரவை மன்னார்குடியில் நடைபெற்றது

மன்னார்குடி, ஜூலை 19 -

     ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்ட பேரவை மன்னார்குடியில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.எஸ்.செந்தில் துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை வட்டச் செயலாளர் டி.சுந்தர்ராஜனும், வரவு- செலவு அறிக்கையை வட்டப் பொருளாளர் எம்.தமிழரசனும் முன்வைத்தனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநில தணிக்கையாளர் எஸ்.புஷ்ப நாதன், மாவட்டத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். பேரவையை நிறைவு செய்து மாவட்டத் தலைவர் என். வசந்தன் உரையாற்றினார்.