districts

img

போர்க்கால அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புக!

திருவாரூர்,நவ.23- தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட பேரவை மாவட்டத் தலைவர் கே.பாலசுப்பரமணியன் தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணை;g பொதுச் செயலாளர் வி.சோம சுந்தரம் துவக்கி வைத்து உரை யாற்றினார். முன்னாள் மாநிலச் செயலாளர் எம்.சௌந்தரராஜன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.கரிகாலன் வேலை அறிக்கையையும் பொருளாளர் ஆர்.மகா லெட்சுமி வரவு- செலவு அறிக் கையையும் சமர்ப்பித்தனர்.  பல்வேறு சங்க நிர்வாகிகள் செ.பிரகாஷ், எஸ்.செங்குட்டு வன் மற்றும் பலர்  வாழ்த்துரை வழங்கினர். பேரவையில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக சி.ராம சாமி, மாவட்டச் செயலாளராக ஆர்.மகாலட்சுமி, மாவட்ட பொருளாளராக சி.வசந்தி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநிலச் செயலாளர் ஏ.லதா நிறைவுரையாற்றினர். 40 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் சத்துணவு ஊழி யர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதி யம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண் டும். ஊழியர்களின் பணிச் சுமையை கருத்திற்கொண்டு காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். மகப்பேறு விடுமுறை ஒரு வருடமாக உயர்த்தி வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.