districts

img

திருப்புறம்பியம் பள்ளியில் மிதிவண்டி நிறுத்தும் இடம் திறப்பு

கும்பகோணம், பிப்.14- கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, திருப்புறம்பியம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ,  மாணவிகள் மேற்கூரையுடன் கூடிய  மிதிவண்டி நிறுத்து மிடம் அமைத்துத் தருமாறு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகனிடம் கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம்  மதிப்பீட்டில் மேற்கூரையுடன் கூடிய மிதிவண்டி நிறுத்தும் இடம் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், திறப்பு விழா நடைபெற்றது. மிதிவண்டி நிலையத்தை திறப்பதற்காக வந்த சட்ட மன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், அப்பள்ளி யில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவியை அழைத்து மிதி வண்டி நிலையத்தை திறக்க வைத்தார். தொடர்ந்து பள்ளி யின் பயிலும் மேலும் சில மாணவிகளை அழைத்து குத்து விளக்கை ஏற்றவைத்தார்.