தஞ்சாவூர், ஜூலை 31-
தெற்கு ரயில்வே நிர்வாகம் திரு நெல்வேலி -தாம்பரம் சிறப்பு கட்டண விரைவு ரயிலை (வண்டி எண் 06004) ஜூலை 30 ஞாயிறன்று காரைக்குடி - பட்டுக் கோட்டை - திருவாரூர் - மயிலாடுதுறை வழி யாக இயக்கியது. திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்ற ரயிலுக்கு பேராவூ ரணி, பட்டுக்கோட்டை ரயில் நிலையங்க ளில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாம்பரம்-திருநெல்வேலி- தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் சனிக்கிழமை இரவு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற் றுக்கிழமை காலை திருநெல்வேலி சென்று, மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலை தாம்பரம் சென்ற டையும் வகையில் திருவாரூர் - பட்டுக் கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் இயக்கினால் விடுமுறைக்கு சென்னையில் இருந்து தென் மாவட்ட ஊர்களுக்கு விடு முறைக்கு வந்து செல்பவர்களுக்கும், திருநெல்வேலி, திருச்செந்தூர், காரைக் குடி, திருவாரூர், வேளாங்கண்ணி, நாகூர், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம் போன்ற ஆன்மீக தலங்க ளுக்கு வரும் பயணிகளுக்கும் மிகவும் பய னுள்ளதாக இருக்கும்
எனவே தாம்பரம்-திருநெல்வேலி -தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலை மயிலாடு துறை - திருவாரூர்’- பட்டுக்கோட்டை - காரைக்குடி - ரயில் பாதை வழியாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன், செயலாளர் வ.விவேகானந் தம் ஆகியோர் தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலா ளர் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.