districts

திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் நிரப்பும் மையம் திறப்பு

 திருச்சிராப்பள்ளி, ஏப்.4- மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.1.23 கோடி  மதிப்பில் ரத்தவகை மற்றும் ஆன்டிபாடி அனலைசர் ஆய்வகம் நிறுவப்பட்டுள் ளது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் ரூ.47 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திரவ ஆக்சிஜன் தொட்டி,  ரூ.29 லட்சம் மதிப்பில் அமைக் கப்பட்ட மின்தூக்கி ஆகியவற்றை நக ராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.  தாய் சேய் பராமரிப்புப் பிரிவில் 526 படுக்கைகள் உள்ளன. வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும். அவர்களுக்கு  ஆக்சிஜன் தடை யின்றி கிடைப்பதற்காகவும், பெண்கள்,  குழந்தைகள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளுக்கு தேவைப்படும் ஆக்சி ஜன் தேவையை இந்த  10,000 லிட்டர்  கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி பயன்படும். கொரோனா பரவல்  போன்ற அவசர காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அமைச்சர் கே.என்.நேரு. நிகழ்வில் ஆட்சியர் எம்.பிரதீப் குமார், மேயர் எம்.அன்பழகன், மாநக ராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், கே.ஏ.பி.விஸ்வநாதம் அரசு மருத்துவக்  கல்லூரி முதுன்மையர் டி.நேரு மற்றும்  உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.