திருச்சிராப்பள்ளி, ஜூலை 20-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த ஒப்பந்த கூலி ரூ650, ஓட்டுநர்களுக்கு ரூ.700 வழங்காத எஸ்.ஆர்.எண்டர்பிரைசஸ் ஒப்பந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தூய்மைப் பணியாளர்கள் தினக்கூலி யில் நாள் ஒன்றுக்கு ரூ.180 சுரண்டு வதை கைவிட்டு முழுமையான கூலி வழங்க வேண்டும். எட்டு மணிநேர வேலை நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி திருச்சி மாநகராட்சி தொழிலா ளர் (சிஐடியு) சங்கம் சார்பில் மாநக ராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க மாவட்ட தலைவர் இளைய ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மாறன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறை சங்க மாநிலத் துணைத்தலைவர் பன்னீர்செல்வம், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெற் றிச்செல்வன், கார்த்திகேயன், பகு திச்செயலாளர்கள் தர்மா, விஜயேந்தி ரன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ் ஆகி யோர் பேசினர். இதில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.