திருச்சிராப்பள்ளி, பிப்.12 - திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூ ராட்சி 10 ஆவது வார்டு தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கலைச் செல்வி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட் டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புற நகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ராமநாதன், வட்டச் செயலாளர் வரத ராஜன், திமுக கிளைச் செயலாளர் குரு, நிர்வாகிகள் ரமேஷ், சந்தோஷ், அஷ்ரப் அலி, சரவணன் மற்றும் கூட்டணி கட்சியி னர் தொட்டியம் கடைவீதியில் வெள்ளி யன்று ஒவ்வொரு கடையாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.