districts

முழுத்தொகை செலுத்தியவர்கள் கிரயப் பத்திரம் பெறலாம்

தஞ்சாவூர், ஆக.8-  

     தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தஞ்சாவூர் வீட்டு  வசதி பிரிவிற்குட்பட்ட திட்டங்கள் மூலம் மனைகள், வீடு கள், அடுக்குமாடி குடியிருப்புகள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வீட்டு வசதி வாரிய திட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள், ஒதுக்கீட்டிற்கு முழு தொகையினையும் செலுத்தியிருந் தால், அதற்குண்டான ஆவணங்களை அலுவலகத்தில் சமர்ப்பித்து, கிரயப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர்  தெரிவித்துள்ளார்.