தஞ்சாவூர், ஆக.31 - தஞ்சாவூரில் அரசியல் தலையீடு போன்ற காரணங்களால், எட்டு மாதங்க ளாகியும் வருவாய் கிராம உதவியாளர் (தலையாரி) பணிக்கான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்கப்படா மல் உள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று நடந்தது. அதன் பிறகு ஒவ்வொரு தாலுகாவிலும் வெவ்வேறு நாளில், திறன் மற்றும் நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள் பணியில் சேர்ந்துவிட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 112 காலிப் பணியி டங்களுக்காக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, எட்டு மாதங்களாகியும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கப் படவில்லை. இதனால் தேர்வு எழுதியோர் தங்களின் சீனியாரிட்டி பாதிக்கப்படும் என வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிராம உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் கூறுகை யில், “மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர் தாலு காவில் 10, திருவையாறு 6, ஒரத்தநாடு 15, பூதலூர் 11, கும்பகோணம் 19, பாபநாசம் 14, திருவிடைமருதுார் 15, பட்டுக்கோட்டை 12, பேராவூரணி 10 என 112 காலிப் பணியி டங்களுக்கு தேர்வு நடைபெற்றது. ஆனால், ஒவ்வொரு ஊரிலும் ஒரு பதவிக்கு ஒன்றுக் கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள தால், எந்த அடிப்படையில் தேர்வு செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையில், பல்வேறு மட்ட அரசி யல் பரிந்துரை வந்ததால், யாருக்கு முக்கியத் துவம் அளிப்பது போன்ற பிரச்சனை ஏற்பட்டது. இதனால், அப்போதைய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற் கிடையே, ஆட்சியர் பத்திரப்பதிவுத் துறை தலைவராக பணி மாறுதலில் சென்னை சென்றுவிட்டார். தற்போதைய மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பும், இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 8 மாதங்களாக மாவட்ட நிர்வாகம் பணி நியமன ஆணை வழங்கு வதை நிறுத்தி வைத்துள்ளது. எங்களுடன் தேர்வு எழுதிய மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பணிக்கு சென்றுவிட்டனர். ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாங்கள் இன்னும் பணிக்குச் செல்லவில்லை. இத னால் எங்களுக்கு சீனியாரிட்டி பாதிக்கப்ப டும். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே இதற்கு தீர்வு காண வேண்டும்” என்றார். இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி கள் கூறுகையில், பல்வேறு குழப்பங் களால் பணி நியமனம் வழங்குவதில் தாம தம் ஏற்பட்டு வருகிறது. ஆட்சியர் இப்பிரச்ச னைக்கு தீர்வு கண்டு விரைவில் பணி நியமன ஆணைகளை வழங்கி, காலிப் பணி யிடங்கள் நிரப்பப்பட உள்ளது” என்றனர்.