districts

img

உண்மையான கேரளக் கதை இதுவல்ல மத நல்லிணக்கத்தை குலைப்பதே நோக்கம்

சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

புதுதில்லி, மே 3-

   “தி கேரளா ஸ்டோரி” உண்மையான கேர ளாவின் கதை அல்ல என்றும், இந்தியா விலேயே சிறந்த தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் கொண்டதே கேரளாவின் உண்மையான கதை. திரைப்படத்தில் வகுப்புவாத பிளவை உருவாக்கும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு  எழும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

   மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய பூமிதான் கேரளாவின் உண்மை யான கதை. இந்த படத்திற்கும் கேரளாவின் உண்மைக் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. லவ் ஜிகாத் என்று எதுவும் இல்லை  என்று ஒன்றிய உள்துறை அமைச்சகமே கூறியுள்ளது. இப்படிப்பட்ட படங்களுக்கும் உண்மை நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோன்ற பிரிவினைவாத அரசியலுக்கு கேரள மக்களிடமிருந்து எதிர்ப்பு எழும் என்று யெச்சூரி கூறினார்.

  32,000 என்ற எண்ணை மூன்றாக மாற்றிய போது, அதற்குப் பின்னால் விளையாடி யவர்களின் புத்திசாலித்தனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். (கேரளாவிலிருந்து 32 ஆயிரம் பேர் ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக திரைப்படத்தின் முன்னோட்டத்தில் காட்டப்பட்டதை எதிர்ப்பு களுக்கு பிறகு 3 என மாற்றப்பட்டுள்ளது) இதற்கு முன்பும் இதுபோன்ற படங்கள் வந்தி ருப்பதாகவும், அதற்கு காஷ்மீர் பைல்ஸ் உதாரணம் என்றும் யெச்சூரி கூறினார்.

  மேலும், கேரள முதல்வர் கூறியது போல் லவ் ஜிகாத் என்ற பொய்ப் பிரச்சாரத்தை வலி யுறுத்தி வகுப்புவாத கலவரத்தை உருவாக்குவதே படத்தின் பின்னணியில் உள்ளவர்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார். திரைப்படத் தடைக்கு எதிரான நிலைப்பாட்டை சிபிஎம் கொண்டுள்ளது. ஆனால், கேரள ஸ்டோரி குறித்து நீதி மன்றமே முடிவு செய்யட்டும் என திரைப் படம் தொடர்பான விவாதத்தில் யெச்சூரி கூறியுள்ளார்.